முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நெருங்கி செயற்பட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நேற்றையதினம் தேசிய அரசாங்கத்தின் கீழ் ராஜ்ய மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டனர்.
ரீ.பி.ஏக்கநாயக்க, டிலான் பெரேரா, சுமேதா ஜெயசேன, லக்ஸ்மன் வசந்த பெரேரா, நிஷாந்த முத்துஹெட்டிகம, நிமல் லான்ஸா போன்றவர்களும் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவானர்கள் என்ற போதும், அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
தேசிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதற்கு மகிந்த ராஜபக்ஷ சுதந்திரம் வழங்கி இருப்பதாக, தபால் மற்றும் தபால் சேவைகள் பிரதி அமைச்சர் துலிப் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தாங்கள் அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ள போதும், மகிந்த ராஜபக்ஷவுக்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாக, பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.