இப்போது இளசுகளின் மனதில் இடம் பிடித்திருக்கும் நடிகன் என்றாலே நம்ம சிவகார்த்திகேயன் தான், நல்ல படங்களை கொடுப்பது மாத்திரமன்றி நல்ல மனிதராகவும் வலம் வருகிறார்.
இவர் அண்மையில் தல அஜித்தை சந்தித்து அவரோடு நீண்ட நேரம் உரையாடியிருந்தார்.
அப்படி என்ன தலயிடம் சிவா பேசியிருப்பார் என்பதை அறிந்துகொள்ள பலரும் ஆர்வத்துடன் இருக்க, சிவகார்த்திகேயன் இதுபற்றி மனம் திறந்திருக்கிறார்.
"அஜித் சேரை சந்தித்தது என் வாழ் நாளில் மறக்கமுடியாத ஒரு விடயமாக கருதுகிறேன்"
அத்துடன், தன்னுடைய தந்தை மற்றும் சகோதரரை ஒரே நேரத்தில் சந்தித்த அனுபவத்தைப் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
"எங்கள் கலந்துரையாடலில் குறுகிய காலப்பகுதியில் சிறந்த திரைப்படங்களை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து பேசியதோடு வித்தியாசமான ஐடியாக்களை எனக்கு சொல்லித்தந்தார், அத்தோடு அவருடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்த முக்கிய காரணங்களையும் என்னோடு பகிர்ந்து கொண்டார், அவ்வாறான விடயங்கள் இனி வரும் எனது சினி வாழ்க்கைக்கு பெரிதும் உதவும், அவருக்கு நன்றிகளை தெரிவிப்பதோடு , அஜித் சேரை போன்ற ஒரு சிறந்த பெரிய மனிதரை தான் பார்த்ததில்லை" என்று நம்ம அஜித்தைப் புகழ்ந்து தள்ளியுள்ளார் சிவகார்த்திகேயன்.