Mahinda Protests : Hearing postponed - மஹிந்தவின் எதிர்ப்பால் விசாரணை ஒத்திவைப்பு (படங்கள்)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
5,583 Views
முன்னாள் ஜனாதிபதியின் எதிர்ப்பையடுத்து , ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டமைக்கே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ பாரிய குற்றச் செயல்கள் மற்றும் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகியிருந்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விளம்பரங்களுக்கான 200 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்தப்படவில்லை.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குமேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.