13,183 Views
கொஹுவளை பிரதேசத்தில் அமைந்துள்ள பெண்கள் விடுதியொன்றில் குளித்துக்கொண்டிருந்த யுவதிகளை படம் பிடித்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள பல்கலைக்கழகமொன்றின் மாணவிகளையே இவ்வாறு படம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் மேசன் என தெரிவிக்கப்படுகின்றது. தடியொன்றில் கையடக்கத்தொலைபேசியை மாட்டியே அவர் படம் பிடித்துள்ளார்.
அவர் வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அவ்விடுதியில் 35 பெண்கள் வரை தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதி அமைந்துள்ள இடத்தில் வெறொரு கட்டிட வேலைக்காக குறித்த சந்தேகநபர் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ரது.
சந்தேகநபர் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.