அவன்ற்காட் மோசடி தொடர்பில் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற்றுள்ளது.
அமைச்சருக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் அவன்ற்காட் நிறுவனத்தின் தலைவர் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர்ர்களான ராஜித்த சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் பாட்டலி சம்பவிக்க ரணவக்க ஆகியோர், அவன்ற்காட் நிறுவனத்தின் தலைவர் வெளியிட்ட கருத்து தங்களுக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக காவற்துறை மா அதிபரிடம் முறையிட்டிருந்தனர்.
இதன்உண்மைத் தன்மைகளை விசாரணை செய்யுமாறு அவர்கள் கோரி இருந்த அடிப்படையில் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.