4,009 Views
வரவு செலவு திட்டத்தில், அரச சேவையாளர்களுக்கான வாகன இறக்குமதிக்கான தீர்வை சலுகை பத்திரம் இரத்துச் செய்யப்பட்டதாகக் கூறி அரச மருத்துவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அரசாங்க பணியாளர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒருமுறை வாகன இறக்குமதிக்கான தீர்வை சலுகை பத்திரம் வழங்கப்படும் என்றும், ஒரு அரச பணியாளரால் அதிகபட்சம் இரண்டு தீர்வை சலுகை பத்திரங்களைப் பெற முடியும் என்றும் பிரதமர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் , பணிப் பகிஷ்கரிப்பு நாளை நிறைவுபெறுமென கூறி அரச மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவர்களின் இந்நடவடிக்கையால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.