4,864 Views
அம்பாறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி , கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற வெளிநாட்டு கலைஞரொருவரின் பங்குபற்றலில் அண்மையில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி குறித்த நிகழ்ச்சியின் போது பெண்கள் மார்புக் கச்சையை கழற்றி மேடையை நோக்கி வீசியதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஒழுக்கக்கேடான நிகழ்ச்சிகள் இதன்பின்னர் நடத்தப்படுவதற்கு அனுமதியளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சி தொடர்பில் ஜனாதிபதி கடுமையாக விமர்சித்திருந்தார்.
உலகப் பிரசித்தி பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் (Enrique Iglesias) பங்குபற்றிய ‘ENRIQUE IGLESIAS LIVE IN COLOMBO’ என்ற குறித்த நிகழ்ச்சியை ‘Live Events’ என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
Live Events நிறுவனத்தின் உரிமையாளர்கள் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் ஆவர்.
இந்நிகழ்ச்சி நடத்தப்பட்ட விதம் தொடர்பில் நாடு முழுவதும் மற்றும் சமூகவலைதளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான காரணம் இந்நிகழ்சியின் போது அரங்கேறிய இலங்கையின் கலச்சாரத்திற்கு பொருந்தாத அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமையாகும்.
இந்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு நிகழ்வுக்கும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளது இந்நிகழ்ச்சியை மையப்படுத்தியே ஆகும்.