தெமடகொட பிரதேசத்தில் நபரொருவரை கடத்தி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக ஹிருனிகா பிரேமசந்திரவை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த பணிப்புரை ,காவற்துறை குற்றவியல் பிரிவுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக, காவற்துறை ஊடக பேச்சாளர் உதவி காவற்துறை அதிகாரி, ருவண் குணசேகர எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.
மேலும் இதற்கிணங்க காவற்துரையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.