13,653 Views
நுவரெலியா ஜயதிலக மாவத்தையில் உள்ள வீடொன்றுக்கு வந்த கும்பலொன்று அங்குள்ளோரை தாக்கியுள்ளது.
ஆயுதங்களுடன் வந்துள்ள குறித்த கும்பல் உடமைகளுக்கும் சேதம் விளைவித்துள்ளதுடன் , மிகவும் மோசமாக வீட்டில் உள்ளோரைத் திட்டியுள்ளது.
பெண்கள் மீது மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களைத் தாக்கி உயிர் அச்சுறுத்தலும் விடுத்துள்ளது.
வாகனமொன்றில் வந்துள்ள மேற்படி குழு , யாரென்று தெரியவில்லை என அவ்வீட்டில் உள்ளோர் தெரிவித்துள்ளனர்.