சூப்பர்ஸ்டார்னா சும்மாவா....? பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல... என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "சிவாஜி" படத்தில் பஞ்ச் வசனம் பேசினாலும் பேசினார். தற்போது நிஜத்தில் அதிரவைத்துக்கொண்டிருக்கிறது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கும் "லிங்கா" பற்றிய விஷயங்கள்.
பொலிவூட் திரையுலகின் மிகப்பெரிய விநியோக நிறுவனமான ஈரோஸ் பற்றியும்,அதன் சென்னைக்கான பொறுப்பை ரஜினியின் மகள் சௌந்தர்யா ஏற்றுக்கொண்டது பற்றியும் முன்னரே சொல்லியிருந்தோம்.இந்தநிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் பெரிய பட்ஜெட் படமான "லிங்கா" திரைப்படத்திற்கு 165 கோடி ரூபா கொடுத்து அதன் உரிமையை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இந்த ஈரோஸ் நிறுவனமே விஜய்யின் "கத்தி" படத்தின் உரிமையையும் வாங்கியிருந்தது என்பதையும் உங்களுக்கு ஞாபகப்படுத்தலாம்.
சூப்பர் ஸ்டார் இன் "லிங்கா" படத்தின் உரிமையை வாங்கியதோடு நிறுத்தாமல்,அதன் ஓடியோ இசை உரிமையையும் இந்த நிறுவனமே 7 கோடி ரூபாவை அள்ளிக்கொடுத்து தன்னகப்படுத்தியுள்ளதாம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்தில் இணைகின்றமை தான் இதுவரை இல்லாத அளவுக்கு,"லிங்கா" இசைஉரிமை இவ்வளவு பெரிய தொகைக்கு விலைபோகக் காரணமாம்.
இதேவேளை, ஈரோஸ் நிறுவனத்தின் சென்னைக்கான பிரிவுக்கு செளந்தர்யா ரஜினிகாந்த் தலைமையேற்றதிலிருந்து, பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முக்கிய படங்களின் ஓடியோ இசை உரிமைகளை இந்த நிறுவனமே தன்வசப்படுத்தி வருகின்றதாம்.
சூப்பர்ஸ்டார்னா சும்மாவா....?
*கணேசமூர்த்தி ராகவன்.