த்ரிஷாவின் முன்னைய நாள் நண்பன் (அவருதான் சொல்ல சொன்னாங்க) என்று உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் தெலுங்கு நடிகர் ராணா, இப்பொழுதெல்லாம் தன் திருமணத்தைப் பற்றியும் வாழ்க்கை பற்றியும் நிறையவே பேசுகின்றார்.
காண்கின்ற அத்தனை பேரிடமும், என் நண்பர்களான அல்லு அர்ஜுன் மற்றும் ராம் சரண் தேஜா ஆகியோருக்கு தான் என் இரகசியங்களையும் வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களையும் சொல்லியிருக்கிறேன். அவர்களோடு மட்டும் தான் அதிகம் மனம் விட்டு பேசுவேன்.
இப்பொழுது அதனையும் குறைத்துக்
கொண்டேன். ஏனென்றால் அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. படப்பிடிப்பு முடிந்ததும் அவர்கள் தமது குடும்பத்தோடு காலம் கழிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தினால் பேசுவதையும் நிறுத்தி விட்டேன்.
இவர்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் தான் எனக்கும் திருமண வயது வந்து விட்டது தெரிகிறது. விரைவில் நானும் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளுவேன் என்கிறார் ஏமாந்து போன இந்த ராணா.