பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார் என்றும், இன்னும் சிலர் இதற்கும் மேலே போய் அவர் இறந்துவிட்டார் என்றும் வந்தந்தியான தகவல்களை பரப்பி வருவது கண்டு, தானே நேரடியாக பேசியுள்ளார் ஆச்சி மனோரமா.
நான் நலமாக இருக்கிறேன். எனது உடல்நிலை நன்றாகவே உள்ளது. யாரும் வதந்திகளை நம்பாதீங்க. என்னை வைத்து கதை பரப்ப யாரால் முடிகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆச்சி மனோரமா.
இந்தியில் மனோரமா எனும் பெயர் கொண்ட துணை நடிகை ஒருவர் இறந்ததை வைத்துக் கொண்டு நம்ம ஆச்சி மனோரமாவை, இறந்ததாக தவறாக கதையை பரப்பியுள்ளார்கள். எனவே, விசமிகளின் இந்த பரப்புரைகளை நம்ப வேண்டாம் என மனோரமாவின் குடும்பத்தினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-