சிம்புவுக்கும் அவரது திரைப்படங்களுக்கும் அடிக்கடி ஏதாவது சிக்கல்கள் வந்த வண்ணமே உள்ளன. எந்தப் படம் வந்தாலும், ஏதாவது பிரச்சினையோடுதான் வந்து சேர்க்கிறது.
இப்படியாக, அவர் நடித்த வாலு திரைப்படம் இம்மாதம் 27ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் மீண்டும் அப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டதோடு ஏப்ரலில் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது மே மாதம்தான் அப்படம் வெளியாகக் கூடும் என கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்பட்டு வருகிறது. இப்படி தொடர்ந்து தனது படம் தள்ளிப்போகிறதே என நொந்துபோய்வுள்ள சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு எதிராக சிலர் தொடர்ந்து சதி செய்துவருவதாகவும், தன் மீதான பொறாமை, வெறுப்பு காரணமாகவே இதுபோல் நடந்து கொள்வதாகவும், ஆனால் தனக்கு கவலை இல்லை என்றும், மன வருத்ததோடு கூறியுள்ளார்.
இதற்க்கு என்ன பதில் வந்து செரப்போகிறதோ?
-கோடம்பாக்கக் குருவி-