நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 19ம் திருத்தச் சட்டத்திற்கு சில திருத்தங்களை முன்வைக்கவிருப்பதாக, சிறிலங்ககா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த 19ம் திருத்தச் சட்டத்தில் சில விடயங்கள் உடன்பட முடியாதிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக அமைச்சரவையின் எண்ணிக்கை 30க்கு வரையறுக்கப்பட்டுள்ள போதும், தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அவ்வாறான விடயங்களுக்கு தாங்கள் சீர்த்திருத்தங்களை முன்வைக்கவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் 19ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளிப்பதாக, சிறிலங்கா சுதந்திர கட்சி முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.