தொகுதி எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வதில் ஏற்படுகின்ற கால தாமதம், புதிய தேர்தல் முறைமையை அமுலாக்குவதற்கு காணப்படும் மிகப்பெரிய சவால் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் திருத்தச் சட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் அசோக்க அபேகுணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கு எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
ஆனால் அதற்கு மிகுந்த கால அவகாசம் தேவை.
இதுவே அரசியல் கட்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.