1,775 Views
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிங்கிரிய தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் , முன்னாள் அமைச்சர் நிமல் லாங்சா அக்கட்சியின் வத்தளை தொகுதியின் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தயாசிறிக்கு வழங்கப்பட்டுள்ள அதே தொகுதியின் ஐ.தே.க அமைப்பாளராக நளீன் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தயாசிறி பாராளுமன்றத்தில் இருந்து விலகியதும் அவரின் இட த்திற்கு பதிலாக ஐ.தே.க.வினால் நியமிக்கப்பட்டவர் .
இந்நியமனம் தொடர்பில் நளீன் பண்டார எமக்கு அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதன்போது தயாசிறி தனக்கு சவால் இல்லையெனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் காலத்தில் தன்னை விமர்சனம் செய்தவருக்கு இப்பதவியை வழங்கியுள்ளதாக நளீன் பண்டார தெரிவித்தார்.