Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

இலங்கையின் மேல், தென் மேல் பிராந்தியங்களில் பெய்து வரும் கடும் மழையில் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்கள் சிக்கித் திணறுகின்றன.
 
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கூட வெள்ளத்தினால் நிரம்பி வழிகிறது.
 
இதோ தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன வெளியேற்றத்தில் வெள்ளத்தில் விளையாடும் சிறுவர்கள்.




படங்கள் - AFP
6,909 Views
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், பொருளாதார ரீதியில் இன்னமும் பின்னடைவில் இருக்கும் ஒரு நாடு தான் பல்கேரியா. ஐரோப்பிய ஒன்றியத்தின் பல மாற்றங்களை செய்தாலும் இன்னமும் இது ஏழை நாடாகவே இருக்கின்றது.

இதன் தலைநகரான சோஃபியாவில் வசித்து வரும் யாசகர் ஒருவர் தனக்கு கிடைத்த பணத்தை தினமும் அங்கிருந்த ஒரு ஆலயத்திற்கு கொடுத்துள்ளார். மேலும் ஏழை எளியவர்களுக்கும், மடங்களுக்கும் கொடுத்து உதவி வருகிறார்.
தனக்கு இல்லாவிட்டாலும் பிறருக்கு இருப்பதையெல்லாம் கொடுக்கும் இந்த யாசகக் கர்ணன் ஒரு புதிரான

எனவே அங்குள்ள மக்கள் இவரை 'வாழும் புனிதர்' என அழைக்கின்றனர். 100 வயதான இந்த யாசகத் தாத்தா மிகவும் எளிமையான ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இவருடைய இந்த செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விடயம்.
858 Views
பெல்ஜியம் நாட்டில் அறுசுவை விருந்தொன்று  வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்பட்டுள்ளது.
இதிலென்ன விசேஷம்னு நீங்க நினைக்கலாம்.இந்த விருந்து பரிமாறப்பட்ட இடம் தான் விஷேஷம். 

'குடை ராட்டினம்' போன்ற வட்ட வடிவான சாப்பிடும் அறை தயாரிக்கப்பட்டு அந்நகரிலுள்ள உயர்ந்த கட்டிடத்தின் மேலிருந்து க்ரேன்களின் உதவியால் நடுவானில் நிலை நிறுத்தப்பட்டது.

பிரபல சமையற் கலை நிபுணர் ஒருவர் இங்கிருந்து விதம்விதமான உணவுகளை சமைத்து சுடச்சுட பரிமாற வாடிக்கையாளர்களும்  தாம் இருப்பது பூலோகமா மேலோகமா என்று தெரியாமலே அந்நகரின் முழு அழகையும் ரசித்தபடி உணவருந்தியுள்ளனர். இங்கிருந்த அனைவரும் இழுத்து கட்டப்பட்ட பாதுகாப்பு பட்டிகளுடன் அமர்ந்திருந்தமை குறிப்படதக்க ஒரு விடயம்.
857 Views
பல மெகாஹிட் திரைப்படங்களில் வெற்றி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் பிரஷாந்த்.

விஜய், அஜித் எல்லாம் வர முதலே உலகம் முழுவதும் ரசிகர் மன்றங்களோடு, குறிப்பாக ரசிகையர் மன்றங்களோடு கலக்கியவர் Top Star பிரஷாந்த்.

இவரை பிடிக்காது என்று சொல்லியவர்கள் யாருமே இருக்க முடியாது, எந்த சர்ச்சைகளுக்குள்ளும் சிக்காத பிரஷாந்த் கிரகலட்சுமியை திருமணம் செய்து பின்னர் அது பிரச்சினையில் முடிய, விவாகரத்தைப் பெற்று சினிமா வாழ்வில் இருந்தே ஒதுங்கி இருந்தார்.

இவருடைய இரசிகர்கள் திரையில் பிரஷாந்தைக் காணாமல் தவித்தார்கள். எப்போது மீண்டும் இந்த செந்தமிழ் செல்வன் வருவார் என்று காத்திருந்தார்கள்.


சத்தமில்லாமல் மீண்டும் இளமையான ஹீரோவாக புதுப் பொலிவோடு களம் இறங்கியுள்ளார் பிரஷாந்த். சாகசம் திரைப்படத்தில் நாயகி இல்லாமலே நடித்துக் கொண்டிருந்தார்.

இப்பொழுது படக் குழுவின் நாயகி வேட்டையில் சிக்கியிருக்கிறார் அழகுப் ப(பு)துமை தமன்னா.

இப்படத்தை பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்க, பிரஷாந்தோடு ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் ஹிந்தியின் அண்மைக்கால பரபரப்பு நடிகை நர்கீஸ் பக்ரி(Nargis Fakhri ) 


-உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும் அப்பு-
1,182 Views
சர்வதேச சிலை கடத்தலை மையப்படுத்தி உருவாகிகொண்டிருக்கும் திரைப்படம் தான் 'களவு தொழிற்சாலை'. இப்படத்தில் ஜெய்ருத்ரா (கதிர்) – வம்சி கிறிஷ்ணா ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

மும்பையை சேர்ந்த குஷி இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.(யப்பா என்னா ஒரு பெயர்)

முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மு.களஞ்சியம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
கிருஷ்ணசாமியின் இயக்கத்தில், ஹரிஷ் ஜெயராஜிடம் பணியாற்றிய ஷியாம் பென்ஜமின்னின் இசையில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன.

குறிப்பாக படத்தின் க்ளைமெக்ஸ் இல் வரும் 'நொடியிலே உன்னை மாற்றலாம்' என்னும் பாடல் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையும், உத்வேகமும் தரும் வகையில் அமைந்துள்ளதோடு, ஒரு விளையாட்டு மைதானத்தில் கால்பந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் பின்னணியில் ஒரு இளம்பெண் சில தோழிகளுடன் சேர்ந்து ஆடுவது போல் படமாக்கப்பட்டுள்ளது.




இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் 150க்கும் அதிகமான உண்மையான கால் பந்தாட்ட வீரர்கள் இப்பாடல் காட்சிகளில் பங்கேற்றுள்ளனர். இந்த மாதத்தில் உலககிண்ண கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளதால் கால்பந்து ரசிகர்களை இது கவரும் எனவும், இப்பாடல் அவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
938 Views
ஐயையோ என்ன நடந்தது இருவரும் நல்லா தானே இருந்தாங்கனு யோசிக்கிறீங்களா? நிஜமா இல்லையாம், படப்பிடிப்புகளுக்காக தான் சிறைக்கு போறாங்களாம்.

இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் தான் புறம்போக்கு.
(பேரே ஒரு மாதிரித் தானே இருக்கு)

'இயற்கை' , 'பேராண்மை' புகழ் எஸ். பி ஜனநாதன் 30 கோடி பட்ஜட்டில் எடுக்கும் படம் இது. இந்த படத்தில் முக்கிய பகுதிகள் சிறைச்சாலையில் தானாம் படமாக்கப்படவிருக்கிறது. இதற்காக எத்தனையோ சிறைச்சாலைகளுக்கு ஏறி இறங்கியபோதும் உயர் பாதுகாப்பு காரணமாக அனுமதி கிடைக்கவில்லையாம்.

இதனால் சென்னையில் இரண்டு கோடி ரூபா செலவில் செட் அமைத்து படபிடிப்புகள்; நடைபெற உள்ளதாம். கிட்டதட்ட 65 நாட்களுக்கு மேல் இந்த செட் சிறைச்சாலையில் படப்பிடிப்புக்கள் நடைபெறும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
809 Views
நடிகர் பிரகாஷ்ராஜ் சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்தில் சக பயணியுடன் சண்டையிட்டுள்ளார். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒன்றும் சினிமாவிற்காக எடுக்கபட்ட கதையல்ல நிஜமாகவே நடந்த கதைதான்.நிஜத்திலும் இவர் வில்லன் தான் என்பதை இப்போது நிரூபித்துள்ளார்.

என்ன நடந்தது தெரியுமா ?
தன்னுடன் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவரோடு சண்டையிட்டது மட்டும் இல்லாமல் இன்னுமொருவரை மிக மோசமான முறையில் திட்டியுள்ளார். அதன் பின் விமான பணியாளர் ஒருவர் இருவரையும் விலக்கி தனித்தனியே அமர வைத்துள்ளார். ஆனால் எதற்காக சண்டையிட்டார்கள் என்ற விடயத்தை அந்த விமான நிறுவனம் தெரிவிக்க மறுத்துள்ளது. திரைப்படத்தில் போலவே நிஜவாழ்விலும் இவர் வில்லனா என்று எல்லோரும் இப்போது கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்.

chellam I love you chellam என்று அவருடைய பாணியில் பின்னர் ஏதாவது பிரகாஷ்ராஜ் சொல்லியிருப்பாரோ!!!!

டவுட்டு 
756 Views
அண்மைய நாட்களில் FACEBOOK ரசிகர் பக்கத்தில் பிரபல நடிகர் ஷாரூக்கானை பின்தள்ளிய சல்மான் கான் என்ற செய்திகள் உலா வந்தன.

இந்த நிலையில் ஷாரூக்கான்,மற்றும் சல்மான்கான் ஆகியோரை பற்றிய ஒரு சுவாரஸ்ய கதையையும் பகிருகிறோம்.

அதாவது சர்வதேச அளவில் இணையத்தில் அதிகமான மக்களை ஈர்த்தவர்களின் பட்டியலில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ஷாரூக்கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் டைம் பத்திரிகை 100 பேர் அடங்கிய இப்பட்டியலை தயாரித்துள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் முதலிடத்தில் உள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இடம்பெற்றுள்ளார்.இப்பட்டியலில் சச்சின் 68-வது இடத்தில் உள்ளார். ஷாரூக்கான் 99-வது இடம் பிடித்துள்ளார். இப்பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தியர்கள் இவர்கள் மட்டும்தான்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் 98 வது இடத்தில் ஷாருக்கானுக்கு ஓரிடம் முன்னே உள்ளார். பாப் பாடகிகள் மடோனா, பியான்சே நோஸல் ஆகியோர் முறையே 3, 4-வது இடத்தில் உள்ளனர். அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 11-வது இடத்தையும், ரஷ்ய அதிபர் பலடிமிர் புட்டின் 27-வது இடத்தையும், செர்பிய டென்னிஸ் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் 61-வது இடத்தையும், போப்பாண்டவர் போப் பிரான்சிஸ் 70-வது இடத்தையும், பிரபல கார் பந்தைய வீரர் மைக்கேல் ஷுமேக்கர் 77-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதேவேளை Instragram என்று சொல்லப்படும் புகைப்பட விரும்பிகளது விருப்புக்குரிய தளமான இந்த தளத்தில் இப்போது முன்னணி நடிகர் அமீர் கானும் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
901 Views
இந்தியக் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் ஷ்ருதி ஹாசனும் காதலிக்கின்றார்கள்.
இது முன்னர் சில காலம் வதந்தியாக உலா வந்துகொண்டிருந்தாலும் உறுதிப்படவுமில்லை.
இருவரும் வாய் திறக்கவுமில்லை.

எனினும் ரெய்னா விளையாடும் போட்டிகள் குறிப்பாக சென்னை சுப்பர் கிங்க்ஸ் விளையாடும் போட்டிகளுக்கு ஸ்ருதி ஹாசன் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தோனியின் மனைவி சாக்ஷி அருகே ஷ்ருதி அமர்ந்திருந்து போட்டிகளைப் பார்ப்பார்.



ரெய்னாவுக்கு ஷ்ருதி வரும் போட்டிகள் ராசியாக அமைந்திருந்தனவாம்.
எனினும் இப்போது ஷ்ருதி பிஸியாக ஆகிவிட அவர் IPL போட்டிகளுக்கு வருவதில்லை.ஆனால் ரெய்னா கலக்குகிறார்.


ஆனாலும் சும்மா Dating மாதிரி இருந்து இப்போது சீரியசான காதலாக மாறியுள்ளது என்று இரு தரப்பும் சொல்லியிருக்கும் நிலையில் இனி உத்தியோகபூர்வமாக ரெய்னா - ஷ்ருதி இருவரும் அறிவிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

கமலுக்கு மருமகனாக ஒரு கிரிக்கெட் வீரர் வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லைத் தான்.

இதற்கு முதல் ஷ்ருதி நடிகர் சித்தார்த்தையும் ரெய்னா இந்திய அமைச்சர் பிரபுல் பட்டேலின் மகள் பூர்ணா பட்டேலையும் காதலித்து வந்திருந்தனர்.


இதோ பூர்ணாவைத் திருமணம் செய்யபோகிறார் என்றிருந்த நிலையில் திடீரென காற்று ஷ்ருதியின் பக்கம் வீசியுள்ளது.

இருவரும் பிசியாக இருக்கும் நிலையிலும் அடிக்கடி சந்தித்தே வருகிறார்களாம்.
இது பற்றி கமலின் கருத்து எப்படி என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் பல்வேறுபக்கமும் இருக்கிறது.

அதுசரி இன்று சென்னையின் முக்கியமான போட்டி பார்க்க ஷ்ருதி வருவாரா?

2,095 Views
கோச்சடையான் வெளிவர முன்னரே லிங்கா திரைப்படத்தின் ஆயத்தங்கள் எல்லாம் அமர்க்களமாக தொடங்கப்பட்டு, ரஜினியும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்.

மைசூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க வேகமான உருவாக்கி வருகிறது லிங்கா. இந்நிலையில், ரஜினிக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் நம்ம நடிகை அனுஷ்காவும் நடித்து வருவது ஏற்கனவே எல்லோரும் அறிந்த தகவல்.
இப்பொழுது புது தகவல் என்ன என்றால், நம்ம இரசிகர்களுக்கு இந்த விருந்து போதாது என்று ஹாலிவூட் நடிகை ஒருவரையும் லிங்காவில் களம் இறக்கி இருக்கிறார்கள்.


பிரிட்டிஷ் நடிகை லாரென் ஜே எர்வின் (Lauren J Irwin) என்பவர் இதில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்க உள்ளார். இவர் வேக்ரே என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தவர் என்பதும் முக்கியமானது.
கவர்ச்சி கதகளி நடிகை இவர் என்பது இன்னொரு கொசுறுத் தகவல்.

மொத்தத்தில் லிங்காவில் நம்ம இரசிகர்கள் திளைக்கப் போகிறார்கள் என்பது மட்டும் இப்போதே புரிகிறது.
1,013 Views
இணையவாசிகளின் விருப்பத்தெரிவான கூகிள் வித்தியாசங்களின் பிறப்பிடம்..
புதுமைகளை உருவாக்கி உலா வரவிடும் ஒரு மஜிக் நிறுவனம்.

உலகில் பல்வேறு பட்ட கார்களை தயாரிக்கின்ற நிறுவனங்கள் உள்ள நிலையில், கூகிள் நிறுவனமும் தனது புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வெற்றியடைந்துள்ளது.

ஏனைய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவான கார்களில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடாமல், தனது வழமையான புதுமைப் படைப்புக்களின் பாணியிலேயே தனக்கென தனியான ஒரு பாணியில், தாமே சுயமாக பயணிக்கக்கூடிய வகையில் நவீன வகையிலான கார்களை உற்பத்தி செய்து சாதித்துள்ளது.

இந்த நவீனரக கார்களில் ஓட்டுனர் தேவையில்லை என்பதுவும்
இரண்டு வகையான ஆளிகளே (switches) காணப்படுகின்றமையுமே இதன் சிறப்பு அம்சமாக காணப்படுகிறது.

ஒன்று நகர்வதற்கும் மற்றொன்று நிறுத்துவதற்குமாக பயன்படுத்தப்படுகிறது.
அதேவேளை மற்றைய கார்களை போன்று சுக்கான் (steering) மற்றும் வேகக்கட்டுப்பாட்டு மிதிகள்(accelerators) இவற்றில் பயன்படுத்தப்படவில்லை என்பது முக்கியமான விடயம்.



சாதாரண கார்களைப் போல் மக்களின் பார்வைக்கு கவரத்தக்க வகையிலும், மிகவும் பாதுகாப்பான வகையில், தன்னியக்க முறையில் இயங்கும் தொழில்நுட்பத்தை விரும்பும் மக்களுக்கு ஏற்ற வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த காரில் இரண்டு பேர் மட்டும் பயணிக்க கூடிய வசதி உள்ளதோடு, மணித்தியாலத்துக்கு 40 கிலேமீற்றர் மட்டுப்படுத்தப்பட்ட வேகத்திலேயே பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

இந்த கூகுள் கார் தயாரிப்பு திட்டம் பற்றி கலிபோர்னியா மாநாட்டில் அதன் இணை ஸ்தாபகர் சேர்கே பிரின் வெளியிடப்பட்டுள்ளார்.

அடுத்த இரு ஆண்டுகளில் முழு அளவில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பரீட்சார்த்தமாக கூகிள் கார்கள் ஓடவிடப்படவுள்ளன.
3,533 Views
நடைபெறும் IPL போட்டிகளில் முதல் சுற்றின் இறுதிப்போட்டியாக இடம்பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணிக்காகப் பந்துவீசிய மேற்கிந்தியத் தீவுகளின் வீரர் கெவோன் கூப்பரின் சில பந்துகளை வீசிய பந்துவீச்சுப்பாணி 'எறிவதாக' அமைந்திருந்ததாக போட்டி நடுவர்கள் தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ராஜஸ்தான் தோற்றிருந்த அந்தப் போட்டியில் கூப்பர் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.



இந்த முறைப்பாடு இந்திய கிரிக்கெட் சபையின் விசேட குழுவினால் BCCI Suspect Bowling Action Committee பரிசீலனை செய்யப்படும்.
அதன் பின்னரே முடிவெடுக்கப்படும்.

எனினும் சில பந்துகள் மீதே சந்தேகம் இருப்பதால், அடுத்த ஆண்டின் IPL போட்டிகளில் கூப்பர் தெரிவு செய்யப்பட முடியும்.
ஆனால் மீண்டும் ஒரு முறை முறையிடப்பட்டால் போட்டித்தடைக்கு உடபடுத்தப்படுவார்.
806 Views
தமிழகத்திலுள்ள நாமக்கல்லுக்கு அடுத்த, ரெட்டிபட்டி என்ற கிராமத்தில் நடந்து வரும் கோவில் திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு இளைஞர் நாடக நட்பணி மன்றம் சார்பில், மணவாழ்க்கை எனும் சமூக நாடகம் நடந்தது.

அதற்கு சிறப்பு அழைப்பாளராக, பிரபல சினிமா இயக்குனர் பாக்கியராஜ்; மற்றும் மச்சான் புகழ் நடிகை நமீதா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இரவு 10.30 மணிக்கு, நமீதா நாடக மேடைக்கு வந்தார்.
அங்கிருந்த ரசிகர்கள் நமீதாவை பார்த்த மகிழ்ச்சியில் முண்டியடித்துக்கொண்டு அவருடனே மேடையில் ஏறினர்.
அதனால் பாரம் தாங்காமல் மேடை ஒருபுறம் சரிந்தது.
மேடையில் அமர்ந்திருந்த, நமீதா, நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சரிந்து விழுந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நமீதா லேசான காயங்களுடன் காரில் ஏறி ஓட்டம் பிடித்தார். விழாவும் ரத்து செய்யப்பட்டது.

இன்னுமா நமீதா மோகம் இருக்கிறது?
1,350 Views
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உலகின் மிகப் பலம் வாய்ந்த மனிதர்.
ஆனால் பழகுவதற்கு இனிமையானவர்; எளிமையானவர்.
 
மக்களோடு மக்களாகப் பழகும்போது ஒரு இயல்பான வேடிக்கை மனிதராகவே மாறிவிடுகிறார்.
 
இதனால் உலகம் முழுதும் ஒபாமாவின் வேடிக்கைப் புகைப்படங்கள் பரவி வருகின்றன.
 
இதோ பல்வேறு கட்டங்களில் ஒபாமாவின் பல்வகை சுவாரஸ்யமான முகபாவங்கள்.

















1,285 Views
பெண்ணுரிமை, ஆண், பெண் சம உரிமை என்றெல்லாம் பேசுவதைக் கேட்டிருப்போம்..
ஆணுக்கு நிகரான உரிமைகள் பெண்ணுக்கு வேண்டும் என்றெல்லாம் சொல்வதைக் கேட்டிருப்போம்.

ஆசிய நாடுகளில் பெண்களுக்கு வீடுகளில் நடக்கும் கொடுமைகள், வன்முறைகள் பற்றித் தினமும் வரும் செய்திகளை அறிந்திருப்போம்.

ஆனால் ஐரோப்பாவில் கதை வேறு..
40% வீட்டு வன்முறைகள் ஆண்கள் மேல் தானாம்.

ஆனால் கொடுமையான விடயம், பெண்களுக்கு வன்முறைகள் இழைக்கப்படும்போது தட்டிக்கேட்க முன்வரும் சமூகம், ஆண்களுக்கு அப்படியான செயல்கள் இழைக்கப்படும்போது கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

உதாரணம் இந்த வீடியோ.



Hidden cameras மூலம் லண்டனில் எடுக்கப்பட்ட இந்தத் திட்டமிட்ட சம்பவத்தின் இரண்டு விதமான செயற்பாடுகளையும் அவதானியுங்கள்.

ஆண்கள் பாவம்.​
960 Views
[1]      «      1566   |   1567   |   1568      »      [1572]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top