நடைபெறும் IPL போட்டிகளில் முதல் சுற்றின் இறுதிப்போட்டியாக இடம்பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணிக்காகப் பந்துவீசிய மேற்கிந்தியத் தீவுகளின் வீரர் கெவோன் கூப்பரின் சில பந்துகளை வீசிய பந்துவீச்சுப்பாணி 'எறிவதாக' அமைந்திருந்ததாக போட்டி நடுவர்கள் தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ராஜஸ்தான் தோற்றிருந்த அந்தப் போட்டியில் கூப்பர் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
இந்த முறைப்பாடு இந்திய கிரிக்கெட் சபையின் விசேட குழுவினால் BCCI Suspect Bowling Action Committee பரிசீலனை செய்யப்படும்.
அதன் பின்னரே முடிவெடுக்கப்படும்.
எனினும் சில பந்துகள் மீதே சந்தேகம் இருப்பதால், அடுத்த ஆண்டின் IPL போட்டிகளில் கூப்பர் தெரிவு செய்யப்பட முடியும்.
ஆனால் மீண்டும் ஒரு முறை முறையிடப்பட்டால் போட்டித்தடைக்கு உடபடுத்தப்படுவார்.