அரசாங்கம் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறுத்திவிட்டு பழிவாங்கல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சுமத்தியுள்ளார்.
ஹிக்கடுவை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்ச்சியொன்றின் பின்னர் மக்களை சந்தித்த அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தமது இயலாமையை மறைக்கும் வகையில் ஏற்கனவே, அபிவிருத்தியை மேற்கொண்டவர்கள் மீது குற்றம்சுமத்துகிறார்கள்.
கடந்த 100 நாட்களில் என்னென்ன பணிகளை மேற்கொண்டார்கள் என்று புலப்படவில்லை.
நாங்கள் செய்த பணிகள் வெளியில் தெரியாது என்று ஒரு தலைவர் கூறுவதை நான் செவிமடுத்தேன்
பருத்தித்துறையிலிருந்து தெவுந்தர முனைவரை பாரிய வேலைத்திட்டங்களை கண்ட இலங்கையில் தற்போது திடீரென அனைத்து பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
தொழிலாளர் வர்க்கத்தினர் தற்போது வேலைவாய்ப்பு அற்று இருக்கின்றனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.