ஜப்பானின் கியூஷு தீவு அருகே கடலுக்கு அடியில் அமைந்துள்ள Kikai Caldera என்ற எரிமலை, மீண்டும் மக்மா குழம்பால் நிரம்பி வருவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
இது எதிர்காலத்தில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள இந்தப் பகுதியில், ஒரு சிறிய வெடிப்பு நிகழ்ந்தால் கூட அது மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தசாப்தங்களாக இந்த எரிமலையில் சிறிய அளவிலான வெடிப்புகளே நிகழ்ந்துள்ளன.
Communications Earth and Environment இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில், மக்மா சேகரிப்பைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் எதிர்கால எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.