இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் பயிற்சி போட்டியில் இலங்கை மகளிர் அணி பாகிஸ்தான் மகளிர் அணியை வென்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 168 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் விமுக்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு 169 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பாக அதிக பட்சமாக சமரி அத்தபத்து 94 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
இந்தத் தொடரில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் எதிர்வரும் 9 ஆம் திகதி நெதர்லாந்து அணியுடன் மோதவுள்ளது.