1,934 Views
குறித்த ஹோட்டல் தனக்கு சொந்தமானதென வெளியான செய்திகளை மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
இதுதொடர்பாக மகிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை நேற்று விடுத்திருந்தார்.
இதில் தான் உருக்கு கூட்டுத்தாபனத்திலோ , அல்லது டுபாயில் உள்ள மெரியட் ஹோட்டலிலோ முதலீடு செய்யவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நிதிக் குற்றங்கள் தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவு அரசுக்கு போட்டியாளர்களை நசுக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை , டுபாயில் உள்ள மெரியட் அல் ஜடாப் ஹோட்டலானது , இலங்கையரான லொக்குவிதானவுக்கு சொந்தமானதென தெரிவிக்கப்படுகின்றது.
அவர் இதில் சுமார் 225 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் லொக்குவிதான வெறும் கைப்பொம்மையே எனவும் இம்முதலீட்டுக்கு பின்னால் மஹிந்தவே உள்ளதாகவும் நீண்ட நாட்களாக ஒரு தகவல் அடிபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.