1,868 Views
இதுதவிர, முதலமைச்சர் உள்ளிட்ட வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நினைவு கூறல் பிராத்தனை நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது முற்பகல் 10.30 மணிக்கு பிரதான நினைவுச் சுடரை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் சுடரை ஏற்றிவைத்தனர்.
பொதுமக்கள் தமது உறவுகளுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மேலும் இதன்போது அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்ததாகவும் எமதுசெய்தியாளர் குறிப்பிட்டார்.
இதனிடையே, யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் சிலர் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் தீபமேற்றி யுத்தத்தில்உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்துள்ளனர்..jpg)
இதேவேளை, கிழக்கு மாகாணமக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் நினைவு கூறல் பிராத்தனை நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்தார்
.jpg)