தென்னிந்திய தமிழ்சினிமாவில் முன்னணியில் இருக்கும் பெரிய பெரிய நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவது ஒரு பெரிய விடயமே அல்ல...ஆனால் தற்போது ஒரு படத்தில் நடித்து அந்தப்படம் ஹிட் ஆகிவிட்டால் போதும்.அடுத்த படத்துக்கு புதிய நடிகர்கள் கோடியில் சம்பளம் கேட்பது புதிய விடயம் தான்... இருந்தாலும் இப்போது அதுவல்ல பிரச்சனை.
என்ன தான் நடிகர்கள் கோடியில் சம்பளம் கேட்டாலும், நடிகைகளின் சம்பளம் என்னமோ லட்சங்களுக்குள் தான். இப்போது அவர்கள் தான் தயாரிப்பாளர்களுக்கு தலைவலியை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
நடிகர்கள் தான் அப்படி என்றால், தற்போது நடிகைகளும் நாங்கள் மட்டும் அவர்களுக்கு சளைத்தவர்களா என்ன...?என்பது போல கோடிகளில் சம்பளம் கேட்க தொடங்கி விட்டார்களாம்.... இதை ஆரம்பித்து வைத்து தயாரிப்பாளர்களை புலம்பவைத்தது வேற யாரும் இல்ல....
நம்ம நயன்தாராவே தாங்க.

தற்போது தமிழில் அவர் வாங்கும் சம்பளம் 2கோடி30லட்சம் இந்திய ரூபாய்கள். அவரை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்துக்கு 1 1/2கோடி சம்பளம் என்கிறார்கள் அனுஷ்காவுக்கு, இந்த நிலையில் அஞ்சானில் ரசிகர்களை அசரவைத்த சமந்தா 1கோடிரூபாய் வாங்கி தயாரிப்பாளர்களை அதிரவைத்துக் கொண்டிருக்கிறார். இவர்களோடு ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் என நீளும் இந்த கோடிகளில் அள்ளும் நடிகைகளின் பட்டியலில் இன்னும் யாரெல்லாம் இணையப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும்.
எது எப்படியோ....நடிகைகள் காட்டில் கோடி மழை இப்போ