வேலூர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தினால் அந்த கிராம மக்கள் சோக வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்,
எதிர் பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிர் இழந்த குரங்கு ஒன்றுக்கு தாரை தப்பட்டை வாத்தியங்களோடு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, பலரும் கண்ணீர் மல்க வழியனுப்பியுள்ளனர்.
தினம் தோறும் வேலூர் மக்கான் பகுதியில் பதினைந்து குரங்குகள் அந்த கிராம மக்களுடன் நெருங்கி பழகி வந்துள்ளன. அந்த மக்கள் தினம் தோறும் உணவுகள் வழங்கி தங்களை போல் அவர்களையும் எண்ணி நெருக்கமாக இருந்த சந்தர்ப்பத்தில்
எதிர் பாராத விதமாக அந்த குரங்குகளில் ஒன்று மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி இறந்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் மற்ற குரங்குகள் செய்வது அறியாமல் பல மணி நேரம் கூச்சலிட்டு அந்த ஊர் மக்களை அழைத்ததோடு ,ஊர் மக்களும் இறந்த குரங்கை சுற்றி கதறி அழுதுள்ளனர்.பின்னர் இறந்த குரங்குக்கு மாலை அணிவித்து கண்ணீர் விட்டு அழுது இறுதி சடங்கை செய்துள்ளதுடன் இன்னும் சோகத்திலேயே மூழ்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.