வசூலில் சாதனை படைத்து இந்தியாவிலும் சர்வதேச நாடுகளிலும் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ள பாகுபலிக்கு இன்னொரு பிரம்மாண்ட திரைப்பட இயக்குனரான ஷங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்நியன், இந்திரன், ஐ போன்ற பிரம்மாண்டத் தயாரிப்புக்கள் மூலமாக தமிழிலும் இந்தியா அளவிலும் பெரியளவில் பேசப்படும் இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டரில் பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலிக்கும் படக் குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள பாகுபலி இயக்குனர் ஷங்கரின் வாழ்த்து தனியே ஒரு பாராட்டு இல்லை என்றும் அது தங்கள் படத்துக்கான ஒரு தரச் சான்றிதழ் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
போட்டியும் பொறாமையும் நிறைந்த சினிமாத் துறையில் இரு தலைசிறந்த படைப்பாளிகள் மத்தியில் உள்ள இந்த நட்பும் புரிந்துணர்வும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.