3,741 Views
வெலிமடை பிதேசத்தில் விருந்தகம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பணம் பெற்றுக்கொள்ள முயன்றதாக க் கூறப்படும் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர்கள் பலியாகினர்.
கடந்த சில 15 ஆம் திகதி இரவு 7.45 அளவில் குறித்த இருவரும் விருந்தகத்திற்குள் உள்நுழைந்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இருவரும் உரிமையாளரை அச்சுறுத்தி பணம் கோரிய வேளையில், பணியாளர்களும் அங்கிருந்தவர்களும் இணைந்து அவர்களை தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன், மற்றுமொருவர் கடுங்காயங்களுக்கு உள்ளான நிலையில் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பலியானவர்கள் இருவரும் சகோதரர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த சகோதரர்கள் இருவரினதும் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்ற போது பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது இறுதிக்கிரியைகளுக்கு முன்னர் சடலங்களை பிரதேசவாசிகள் வெலிமடை நகருக்கு கொண்டு செல்ல முயன்றமையாலேயே இப்பதற்ற நிலை ஏற்பட்டது.
பின்னர் நடந்தது என்ன காணொளியைப் பார்வையிடவும்