தாவர விதைகள் மழையின் ஒலியைக் கேட்டு, மிகவேகமாக முளைப்பதாக மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இயற்கையில் நிலவும் ஒலிகளை விதைகளால் உணர முடியும் என்பதற்கான முதல் நேரடி ஆதாரம் இதுவாகும் என்று
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்விற்கு சுமார் 8,000 விதைகளை ஆழமற்ற நீர் நிரப்பப்பட்ட தொட்டிகளில் வைத்து ஆய்வு செய்தனர்.
சில விதைகளுக்கு லேசான, மிதமான மற்றும் கனமழை பெய்வது போன்ற ஒலிகள் (Dripping water sound) செயற்கையாகக் கேட்கச் செய்யப்பட்டன.
மழையின் ஒலியைக் கேட்ட விதைகள், சத்தமில்லாத சூழலில் இருந்த விதைகளை விட 30 முதல் 40 சதவீதம் வேகமாக முளைக்கத் தொடங்கின.
ஒரு மழைத்துளி தரையிலோ அல்லது நீரிலோ விழும்போது, அது நீருக்கடியில் சக்தி வாய்ந்த ஒலி அலைகளை உருவாக்குகிறது.
இந்தப் பலமான அதிர்வுகள் விதைகளை உலுக்குகின்றன. இதனால், விதைக்குள் இருக்கும் 'ஸ்டேடோலித்கள்' தங்கள் இடத்திலிருந்து நகர்கின்றன.
இந்த இடமாற்றமே விதைக்கு முளைப்பதற்கான சமிக்ஞையை (Biological signal) வழங்குகிறது.