Mutant Flowers - ஜப்பானில் பூத்த விசித்திரப் பூக்கள் - அணுக்கதிர்வீச்சுத் தாக்கமும், மாற்றம் பெறும் மரபணுக்களும்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
6,122 Views
ஜப்பானில் பூத்த சில விசித்திரப் பூக்களின் புகைப்படங்கள் இணையவெளி எங்கும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இவை அணுக்கசிவுத் தாக்கத்தின் விளைவாகவே நேர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இரண்டாம் உலகப்போரில் எதிர்கொண்ட அணுகுண்டுவீச்சுக்களின் தாக்கங்களே பல தசாப்தங்கள் கடந்தும் இன்னமும் விலகாத நிலையில், மீண்டுமொரு அணுக்கதிர்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது ஜப்பான். இந்தநிலையில், ஹிரோஷிமா மற்றும் நாகஷாகி நகரங்களின் வரிசையில் புகுஷிமாவும் இணைந்துகொன்டதன் மூலம் அணுத்தாக்கத்தில் அழிந்துபோக ஜப்பான் சபிக்கப்பட்டிருக்கின்றதோ என்றே எண்ணத் தோன்றுகின்றது.
புகுஷிமா அணு ஆலை சேதமாகியுள்ள காட்சிகள்
உலகப்போரின்போது அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டுகளினால் ஹிரோஷிமா,நாகஷாகி நகரங்கள் மீளமுடியாத அளவுக்கு தகர்ந்து போனதோடு, இன்றளவும் தொடர்கின்றன கதிர்வீச்சுத் தாக்கங்கள். இந்தப்பேரழிவு செயற்கையாக உண்டாக்கப்பட்டது.
ஆனால், இம்முறை உண்டான தாக்கமோ, நான்கு வருடங்களுக்கு முன்னர் புகுஷிமா அணுஉலைகளின் மீதான இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்டிருக்கின்றது.
ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி காரணமாக அணு உலைகள் சேதமடைந்ததுடன், அணுக்கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டது. அதன் தாக்கம் தற்போது தான் வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. விலங்கினங்கள் தொடக்கம் தாவரங்கள் வரை அதன் தாக்கம் பரவலடைந்திருக்கின்றது. உருமாற்றமடைந்த பழங்கள் மற்றும் விகாரமடைந்த வண்ணத்துப்பூச்சிகளின் புகைப்படங்கள் அதற்கு சாட்சியாக முன்னர் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், அணுக்கதிர் தாக்கத்தின் வலுவை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், தற்போது மரபணுக்களில் மாற்றம் பெற்ற பூக்களின் படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப்படங்கள் புகுஷிமாவிலிருந்து 70Km தொலைவிலுள்ள நசுஷியோபரா பிரதேசத்தில் படமாக்கப்பட்டிருகின்றது.