வாக்கெடுப்பு நடைபெறவுள்ள இன்றைய தினத்தின் பாதுகாப்புக்காக 63 ஆயிரம் காவற்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மேலதிகமாக சிறப்பு அதிரடிப் படையினர் 4 ஆயிரம் பேரும், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் 7 ஆயிரம் பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
நேர்மையானதும், சுதந்திரமானதுமான தேர்தலை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மக்கள் அச்சமின்றி தேர்தலில் வாக்களிப்பை செய்யுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அமைதியை பாதுகாப்பதற்கான தேவையான அதிகாரத்தை காவற்துறை பயன்படுத்தும் என்றும் காவற்துறை பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.