கொழும்பு - குருணாகல் வீதியின் மினுவாங்கொட யாகொடமுல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் பலியானதுடன், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பு நோக்கி பயணித்த டிபெண்டர் ரக வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
தமக்கு முன்னாள் பயணித்த பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட டிபெண்டர் ரக வாகனம், எதிரே வந்த மற்றுமொரு தனியார் பேருந்தில் மோதுண்ட நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் மினுவாங்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கம்பஹா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் என்றும், எனினும் இது குறித்த மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற வில்லை என்றும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.