4,644 Views
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரொருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மாதம்பே பிரதேச த்தைச் சேர்ந்த துஷ்த தேவப்பிரிய விஜேசேன என்ற நபரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
32 வயதான அவர் 'கனிதயா' என அழைக்கப்படுபவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனக்கு தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் வைத்து நேற்று மாலை 4 மணியளவில் தற்கொலை செய்துள்ளார்
அவர் மீது கொலை , பாலியல் உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.