7,623 Views
இக்காலத்தில் இடம்பெறும் பல்வேறு குற்றச்செயல்களை சி.சி.டிசி கமெராக்கள் காட்டிக்கொடுத்து விடுகின்றன.
இந்தியாவின் டெல்லியின் அருகில் இடம்பெற்ற கொலை சம்பவமொன்றின் சி.சி.டிவி இன் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.
டெல்லி அருகே தொழிலதிபர் ஒருவரை ஓட ஓட விரட்டி சென்று சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு 10.30 மணியளவில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு , மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் ஒருவரை சுடுவதற்காக விரட்டுகின்றனர். அந்த நபர் அவர்களிடம் இருந்து தப்பி ஓடுகிறார். அருகே இருந்த மரத்தில் மோதி அந்த நபர் கீழே விழுகிறார்.
ஆனால் விடாமல் பின்னாலேயே விரட்டி செல்லும் இருவரும் அவரை சுடுகின்றனர்.சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது. குற்றவாளிகளை பொலிஸார் தேடி வருகின்றனர்.