2,659 Views
சேயா சதெவ்மியின் படுகொலை சந்தேக நபரான சமன் ஜயலத்துக்கு எதிராக சட்டமா அதிபரால் நீர்கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதான நான்கு குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கி இந்த குற்றப் பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
மனிதப் படுகொலை, கடத்தல், பாலியல் பலாத்காரம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோ கம் ஆகிய நான்கு குற்றச்சாட்டுக்களே சமன் ஜயலத் என்பவருக்கு எதிராக சட்ட மா அதிபரால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களாகும்.
நேற்றைய தினம் சந்தேகநபர் சமன் ஜயலத் சிறைச்சாலையில் இருந்து அழைத்துவரப்பட்டு மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.