சின்னத்திரையில் காமெடி என்கிற ஒன்றை செய்து, சிரிக்க வைத்து வெள்ளித்திரைக்குள் நுழைந்துகொண்டவர்கள் நிறையப்பேர்.
இதே பாணியிலான வரவுதான் மா.கா.பா ஆனந்த்.
சில நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம், சின்னத்திரையில் இருந்த இவர் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் வந்தார் .
கிருஷ்ணாவுடன் இணைந்து இரு நாயகர்களில் ஒருவராக நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றவர், தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அத்தோடு இப்பொழுது பாடகராகவும் களமிறங்கி தனது பணியை செவ்வனே செய்ய ஆரம்பித்துள்ளாராம் மா.கா பா.
'மொக்கப்படம்' என்ற படத்தில் வல்லவன் இசையில் லவ் பண்ணுங்க லவ் பண்ணுங்க எனும் பாடலை பாடியிருக்கிறார்.
''பார்டா....!
பலபேரும் வந்து சில காலம் போனதும்தான் பல அவதாரங்களில் கை வைப்பாங்க, பையன் வந்ததுமே பாடிக்கிறான் '' இப்பிடித்தாங்க கோடம்பாக்கம் பேசிகொண்டிருக்கு !
நாம என்ன பண்ண? எல்லாம் விதி!