குறிப்பிட்ட ஒரு கால கட்டத்தை தன் கரங்களுக்குள் வைத்திருந்த கலக்கல் கனவுக் கன்னி நடிகை ரம்பா. இவரது படங்களில் இவரது நடிப்புக்காகவும் கவர்ச்சிக்காகவும் தியேட்டர்களை நிறைத்தவர்கள் அதிகம். அந்தளவுக்கு இவர் பிரபலமாகவிருந்தார்.
அதாவது திருமணத்துக்கு முதல் இவரது ராஜ்ஜியம் பல மொழிகளில் இருந்தது எனலாம். அத்தனை மூத்த நடிகர்களுடனும் சரி, இளையவர்களோடும் சரி இணைந்து நடித்துள்ள பெருமை ரம்பாவுக்குமுண்டு.
இதெல்லாம் நமக்கும் தெரியும் பிரச்சினைக்கு வாய்யான்னு நீங்க சினப்பது புரிகிறது.
அதாவது, நம்ம ரம்பா வீட்டில் அவரது 4.5 கோடி மதிப்புள்ள நகைகள் களவு போயுள்ளன. கனடாவில் இலங்கைத் தமிழரான கணவரோடு வசித்துவரும் ரம்பாவுக்கு சென்னையிலும், ஹைதராபாத்திலும் வீடுகள் உண்டு. அதில், ஹைதராபாத் வீட்டில், ரம்பாவின் அண்ணன் குடும்பம் வசித்து வந்துள்ளனர். அவர்கள் இல்லாத சமயத்தில்தான் கொள்ளை இடம்பெற்றுள்ளதாகவும், கொள்ளையோடு தனது மனைவி பல்லவிக்கும் அவரது குடும்பத்துக்கும் தொடர்பு இருப்பதாக ரம்பாவின் அண்ணா புகார் அளித்துள்ளது இன்னும் பீதியைக் கிளப்பியுள்ளது.
ரம்பாவில், ஆரம்பத்தில் இருந்தே விருப்பம் இல்லாத பல்லவியின் குடும்பமும் பல்லவியும் தான் திட்டமிட்டு இதனை செய்திருக்கிறார்கள் என்று, ரம்பாவின் அண்ணன் தன் மனைவியின் மீதே பழியினை சுமத்தியிருப்பது இன்னும் பூதகரமாக பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் யார் சம்மந்தப்படவ்ர்கள் என்று!
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-