சீனாவைச் சேர்ந்த ஜியான் பெங் இவர் தனது அன்பு மனைவியை விவாகரத்து செய்துள்ளார். என்ன காரணம் என்று விசாரித்த போது தெரிய வந்த விடயம் அனைவரையும் அதிசயிக்க வைத்தது.
அவலட்சணமாக குழந்தைகளைப் பெற்றமையே இந்த விவாகரத்துக்கு காரணமாம். ஜியானும் அவரது மனைவியும் அழகானவர்கள். இந்த அழகான தம்பதியினருக்கு ஏற்கனவே அழகான இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு மூன்றாவதாக பிறந்த குழந்தை தான் அவலட்சணமாக பிறந்துள்ளது. அழகின் மேலும் முகத்தோற்றத்தின் மேலும் அதிக விருப்பம் கொண்ட ஜியானால் இக்குழந்தையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதன் அடுத்தகட்டமாக மனைவியின் மீது சந்தேகம் கொண்ட ஜியான் வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார், அப்பரிசோதனைகள் கூட இக்குழந்தையின் தந்தை ஜியான் என்பதை உறுதிபடுத்தியுள்ளது.
எது எப்படி இருந்தாலும் அழகான எங்களுக்கு இப்படி ஒரு குழந்தையா என்பது தான் ஜியானின் கேள்வி. அவரின் கேள்விக்கு அவருக்கு கிடைத்த பதில் தான் அதிர்ச்சியான விடயம்.
இவரின் மனைவி இத்தனை காலமும் மறைத்துவைத்த உண்மையை கூறினார்.
தான் ஜியானை சந்திக்கும் முன் அதாவது திருமணத்தின் முன் தனது தோற்றம் அழகில்லை; அதனால் தான் முகமாற்று சிகிச்சை செய்து கொண்டதாகவும், தன் கணவரிடம் இருந்து அந்த உண்மையை மறைத்ததாகவும் கூறியுள்ளார்.
மனைவி தன்னை ஏமாற்றிய குற்றத்துக்காக வழக்கு தொடர்ந்த ஜியானுக்கு மான நஷ்ட ஈட்டுடன்(120000 அமெரிக்க டொலர்கள்) விவாகரத்தும் கிடைத்தது.