Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

முத்தமிட்ட மாலுமி - Kissing Sailorஎன்ற பெயரில் பிரபலமானவர் அமெரிக்காவின் க்லென் மக்டபி (Glenn McDuffie).

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது அமெரிக்கா ஜப்பானை வெற்றி கொண்டதை அறிந்து ஆனந்தத்தில் அல்லோலகல்லோலப்பட்டு அருகே சிவனே என்று நின்று இருந்த ஒரு பெண்மணியை இழுத்து அணைத்து உதட்டில் உம்மா கொடுத்த கப்பலோட்டி மக்டபீ தனது 86 வயதில் மரணமாகி இருக்கிறார்.

ஒரு முத்தம் இவருக்கு உச்சபட்ச புகழைக் கொடுத்தது.



இவர் அடைந்த பிறவிப் பயன் என்ன தெரியுமா??

இவர் அந்த கிளுகிளுப்பான வீர செயலை புரிந்ததை அதே இடத்தில் இருந்த புகைப்பட கலைஞர் தன்னுடைய தன்னுடைய புகைப்பட கருவியில் போட்டோவாக பிடித்து பத்திரிகையில் வெளியிட்டு இருக்கிறார்.

பின்னாளில் இவர்தானா அந்த போட்டோவில் இருக்கும் நபர் என்பதை அறிந்து கொள்வதற்காக இவரை அழைத்து அதே இடத்தில் அதாவது சம்பவ இடத்தில் மீண்டும் ஒரு முறை நிறுத்தி அதே போன்று உம்மா கொடுக்க சொல்லி (முதியவரான பின்னரும் கூட) 100 முறை போட்டோவை எடுத்து பார்த்திருக்கிறார்கள்.





கிழவரான பின்னரும் தன முத்தமிட்ட மாலுமி நாட்களை குஷியாக ஞாபகப்படுத்தி கலக்கியிருந்தார் மக்டபி.
1,467 Views
இந்த மானிட பிறவியில் மனிதனாக படைக்கப் பட்ட ஒவ்வொருவரும் மாட்டை அடக்கி பாத்திருப்பீர்கள் காளையை அடக்கி பாத்திருப்பீர்கள் அவ்வளவு ஏன் வியஜகாந்துடைய படங்களில் மதங் கொண்ட யானையை கூட அடக்கி பாத்திருக்கோம்.

ஆனால் நாங்க இப்ப பாக்க போறது வெறும் 22 வயதான தாய்லாந்து கட்டிளம் காளை ஒருவர் தன்னுடைய பார்வையிலேயே (பாவையை மயக்கி இருக்கிறார் என்று தானே நினைப்பீர்கள்.. ஆசையை பாருங்க.. ) நானும் அப்படிதான் நினைத்தேன்.

ஆனால் இந்த நபர் பாம்பை - அதுவும் கடும் விஷம் கொண்ட ராஜ நாகத்தை  அடக்கி கஞ்சத்தனம் இன்றி ஆசை முத்தங்களை அள்ளி அள்ளி வழங்கி இருக்கிறார்.


முதல் கட்டத்தில் குறிப்பிட்ட நபரை அந்த பாம்பு நெருங்கவே விடவில்லையாம் என்றாலும் நிமிடங்கள் கழிய கழிய குறித்த தாய்வான் நபரின் கட்டுபாட்டுக்குள் பாம்பு வந்துவிட்டதாம்.



பாருங்களேன் பாம்பைக்கூட விட்டுவைக்கவில்லையே..... பாசம் பாசம்..
1,884 Views
கழுத்தளவு சேற்று நீரில் தினந்தோறும் நீந்திச் சென்று தன மாணவர்களின் கல்விப்பசி போக்கும் ஆசிரியர் இந்தக் காலத்திலும் இருக்கிறார் என்றால் அது ஆச்சரியத்துக்குரியது மட்டுமில்லை, போற்றக்கூடியதுமாகும்.

இந்தியாவின் கேரளா மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தின் சிறிய கிராமம் ஒன்றைச் சேர்ந்த 40 வயதான ஆசிரியர் அப்துல் மாலிக் ஒவ்வொரு நாளும் காலையில் 9 மணிக்கு தன் கிராமத்தின் ஆற்றங்கரையின் ஒரு புறத்தில் நின்று ஆடைகளை மாற்றி, அவற்றை நனையாத மாதிரி பத்திரப்படுத்திக்கொண்டு கழுத்தளவு நீந்தி மறுகரை அடைகிறார்.

மீண்டும் நல்ல ஆடைகளுக்குள் தன்னை உட்புகுத்தி காட்டு வழியாக மலையேறி 20 வருடங்களாகக் கற்பிக்கும் பாடசாலையைச் சேர்கிறார்.



இவ்வளவும் எதற்காக?

"பஸ்ஸில் ஏறினால் 12 கிலோ மீட்டர் தூரம், 3 மணி நேரம் எடுக்கும். இப்படியே நீந்தி, பின் நடந்து போனால் 25 நிமிடங்கள். நேரத்தையும் மிச்சப்படுத்தலாம், அந்த நேரத்தில் மாணவர்களுக்கு ஏதாவது பயனுள்ளதா சொல்லிக் கொடுக்கலாம்" என்கிற மாலிக்குக்கு 20 வருட அனுபவம் அலுக்கவில்லையாம்.

வெறும் 25000 ரூபாய் சம்பளத்துக்காக அல்ல இது; அதையும் தாண்டிய ஆத்ம திருப்தி என்கிற அப்துல் மாலிக்கின் மாணவர்கள் இவரது பெயரைச் சொன்னாலே உருகிப் போகிறார்கள்.

அதில் ஒரு பத்து வயது மாணவன் தன் எதிர்கால லட்சியம் பற்றிக் கேட்டபோது "மாலிக் சேர் போல ஆசிரியராக வரவேண்டும்" என்கிறான்.
1,556 Views
ஆடுகளம் திரைப்படத்தின் மூலமாக தனுஸ் ஜோடியாக தமிழில் அறிமுகமான நடிகை டாப்ஸி எங்க இப்போ என்று கேட்கும் அளவுக்கு ஆளே தமிழ் சினிமாவில் இல்லை.

என்ன டாப்சி இப்பிடி ஆகிட்டீங்கன்னு கேட்டால், பொண்ணு புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க. ''இங்க நடிக்குறதுக்கு ஏற்றவங்களை யாரும் தேடுறதில்லை. எல்லோருமே கவர்ச்சிக்கே முதல்ல நடிகைகளை பயன்படுத்துறாங்க. நான் அந்த மாதிரி நடிக்கிறதுக்கு விரும்பவில்லை. எனக்கு தகுந்த பாத்திரங்கள் அமையும் போது மட்டுமே நடிக்க சம்மதிப்பேன். இல்லைன்னா... வேற தொழிலை பார்த்துட்டு போய்ட்டே இருப்பேன்'' என்று டாப்ஷி எகிறி விட்டார்.

ஆனாலும், இப்பொழுது இன்னுமொரு தகவல் கிடைத்திருக்கிறது.
தமிழில் தனக்கு சரியான வாய்ப்புக்கள் கிடைக்காமையால், தனது மனேஜரிடம் இயக்குனர்களுக்கு இனிக்கும் செய்தி ஒன்றை வழங்கியிருக்கிறார். என்ன தெரியுமா?
கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியில் எல்லை இல்லாமல் நடிக்கவும் ஆடைக்குறைப்பை எந்தளவுக்கு வேண்டுமென்றாலும் குறைக்கவும் தயாராக தான் இருக்கும் செய்தியை தெளித்திருக்கிறார்.

அப்போ நீங்க யோசிக்கலாம், முதல்ல ஏதோ சொன்ன போல இருக்கேன்னு ! அது அப்பிடித்தான்...! ஒருத்தருக்கு ஒரு மாதிரி பேசுவம்ல...
6,002 Views
கமல், விஜய், சூர்யா, விக்ரம் உட்பட தமிழ் சினிமாவின் அனேக முன்னணி நாயகர்களின் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் ஹரிஸ் ஜெயராஜ்.
ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், ‘தல’ அஜித்துக்கும் இதுவரை இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. இது பற்றி நண்பர் வட்டாரத்தில் வருத்தப்பட்டும் இருந்தார் ஹரிஸ்.

தற்போது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்திற்கு இசையமைக்க ஹரிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இப்படம் முடிவடைந்ததும் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்வார் என்கிறார்கள். முதலில் இந்தக் கதையை ரஜினிக்குதான் சொன்னாராம் கே.வி.ஆனந்த். ஆனால், இந்தக் கதைக்கு பொருத்தமானவர் அஜித்தான் என ரஜினியே சொல்லி கே.வி.ஆனந்தை ‘தல’யிடம் அனுப்பி வைத்தார் என்றும் கூறுகிறார்கள்.
(இங்கே இதே பக்கத்தில்இது பற்றி நாம் முன்பு சொல்லியும் இருந்தோம்)

எது எப்படியோ ஹரிஸின் நீண்டநாள் ஆசை தற்போது இப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் நிறைவேறப் போகிறது
1,672 Views
இந்த வருட ஆரம்பத்திலேயே பொங்கல் களை கட்டியது.
பொங்கல் வெளியீடுகளான அஜித்தின் ‘வீரம்’ படமும், விஜய்யின் ‘ஜில்லா’ படமும் மோதிக் கொண்டன.

இரு படங்களுமே வசூலில் குறைவில்லாமல் ஓடியதால், ‘தல தளபதி’ கூட்டணி வரும் தீபாவளிக்கும் மோதவிருக்கின்றன.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ‘தீரன்’ எனப் பெயரிடப்பட்டிருப்பதாக சொல்லப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன்முறையாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை தீபவாளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படமும் தீபாவளிக்கே வெளியிடப் போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்னும் படப்பிடிப்பு துவங்காத இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இசையமைப்பாளர் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் இயக்குனர் கௌதம்.
(ஹரிஸ் ஜெயராஜ் என்று சினிமாப் பட்சிகள் கூவுகின்றன)

இந்த இரண்டு படங்களும் தீபாவளிக்கு ரிலீஸாகுமானால் தியேட்டர்களில் சரவெடிதான் என ‘தல தளபதி’ ரசிகர்கள் சந்தோஷத்தில் மிதக்கின்றனர்.
1,670 Views
ஒரு கால கட்டத்தில் , அதாவது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் உச்சத்திலிருந்த நடிகைகளுக்கு ரொம்ப பிடித்தவராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக்.

அம்பிகா, ராதா, ரேவதி முதல் அடுத்த தலைமுறையின் குஷ்பு, ரோஜா வரை கார்த்திக் என்றால் உருகி விடுவார்கள்.

இப்போது காலம் உருண்டோடி, இப்போது உள்ள இளம் நடிகைகளின் பிரியமான தோழனாக வலம் வருகின்றவர், அப்பா வழியில் தப்பாத கௌதம் கார்த்திக்.

அவரோடு கூடவே நடிக்கும் நடிகைகளை ரொம்ப நட்போடு நெருங்கிப் பழகுகிறாராம் கௌதம். ப்ரியா ஆனந்த், லட்சுமி மேனன், ராகுல் ப்ரீத் சிங், கார்த்திகா போன்ற நடிகைகளின் நேசமான நண்பன் கௌதம் என்பது நம்ம திரையுலகின் முக்கிய இளைய தலைமுறை நடிகர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.

கௌதம் கார்த்திக்கை இப்படியே விட்டால், இது எங்க போய் முடியுமோ என்று கணக்குப் போட்டுள்ள நாயகர்கள், கௌதமின் இமேஜை டமேஜ் பண்ணும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

உங்களை மாதிரி அலையுறேனா, அலப்பறை பண்றேனா, அறை போடுறேனா, அன்பாகத் தானேடா பழகுறேன் இதுவும் குற்றமான்னு புலம்புகிறார் கௌதம்.
1,733 Views
அடடா... தமிழ் சினிமாவில் இப்படியொரு அறிவிப்பா? பொதுவாக இந்தப் படத்தில் எனக்கு முத்தக் காட்சி ஏதாவது இருக்கிறதா என்று தான் முதல் கேள்வியை இயக்குனர்களிடம் கேட்பார்கள் நம்ம தமிழ்த் திரையில் தோன்றும் அதிகமான நடிகைகள்.

ஆனால், முத்தக் காட்சியா ..? வாங்க பழகலாம் ரேஞ்சில் ஒருவர் அறிக்கை விட்டுள்ளார்.

அவர் வேறு யாருமல்ல , ஆஹா கல்யாணம் படத்தில் நடித்திருக்கும் வாணி கபூர் தான் ஸ்டேட்மெண்டுக்கு சொந்தமானவர்.

அறிமுகமான முதல் படத்திலேயே மிக நெருக்கமான முத்தக் காட்சியில் நடிகர் நானியொடு நடித்துள்ளாராம் அம்மணி. இன்னும் இருக்கும் ஏனைய வாய்ப்புக்களை தன் வசப் படுத்தவே இந்த அம்பலமான அறிவிப்பு என்று சில குடும்ப குத்துவிளக்கு நடிகைகள் புலம்பி வருகிறார்கள்.
-ஆனாலும், அம்மணி பிழைக்கத் தெரிந்தவர் என்பது இந்த அறிவிப்பில் இருந்தே தெரிகிறது.

அம்மணியின் அம்சமான படங்களை சூரியனின் இணையத்தளத்தின் புதுப்படங்கள் பக்கத்தில் பார்த்து மோட்சம் பெறுங்கள் ரசிக சிகாமணிகளே.

Click here

6,063 Views
களவாணி படத்தில் அறிமுகமானவர் ஓவியமான ஓவியா.
ஆரம்பமான அந்தப் படத்தில் அழகான பள்ளி மாணவி வேடம் என்பதால், பாவாடை தாவணியில் தோன்றி ஒரு kudumpap பாங்கான இடத்துக்கு சொந்தக்காரர் என தன்னை அடையாளப்படுத்தி இருந்தார் ஓவியா.
ஆனாலும், அதன் பிறகு வெளியான கலகலப்பு படத்தில் அஞ்சலியோடு போட்டி போட்டு கவர்ச்சியில் கலக்கியிருந்தார்.
ரைட் .. இனி இப்பிடி நடிக்க மாட்டாங்கன்னு நெடிய பெருமூச்செறிந்த நம்ம மக்களுக்கு மீண்டும், தான் ஒரு எல்லாம் வல்ல நடிகை என்பதை நிரூபணம் செய்திருக்கிறார் அம்மணி.
சமீபத்தில் வெளியான புலிவால் படத்தில் கவர்ச்சியில் கதகளி ஆடியிருக்கும் ஓவியமானவர், இப்பொழுது எல்லா இயக்குனர்களுக்கும் ஒரு குதூகலமான செய்தியை எட்ட விட்டிருக்கிறார். இனி கதைக்கு ஏற்ற அளவுக்கு கவர்ச்சிக்கு நான் ரெடி! என்னை வைத்து படம் எடுப்பவர்களுக்கு நஷ்டம் தராத அளவுக்கு என்னால் நீங்கள் எதிர்பார்க்கும் கவர்ச்சியை வாரி வழங்க முடியும் என்று தாராளம் காட்ட தான் தயார் என்பதை அறிக்கையாய் விட்டிருக்கிறார்.

இந்த பப்ளிக்கான ஸ்டேட்மெண்டால் இனி எங்கும் ஓவியாவின் புகழும், அவருக்கான கதைகளும் ஓவியாவின் கிளுகிளு படங்களும் தான் !
5,722 Views
என்னடா ரொம்ப நல்ல பையனா எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் இருக்காரே இவரு என்று, எண்ணிய எல்லோருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார் நடிகர் அதரவா முரளி.
அதாவது, விடயம் என்னவென்றால், அப்பா முரளி போலவே அடக்கமாகத்தான் சில காலங்கள் இருந்தார் அதர்வா. ஆனாலும் இப்போது இவர் செய்திருக்கும் அதிரடி மாற்றம் திரையுலகை கொஞ்சம் மிரள வைத்திருக்கிறது.
அப்பா முரளி காலத்திருந்தே தமக்கு மனேஜராக இருந்த சம்பத் என்பவரை , தடாலடியாக வேலையிலிருந்து நீக்கி இருக்கிறார் அதர்வா.
இப்படி இவர் மனேஜரை துணிந்து தூக்கியெறிய காரணம் என்ன என்று தேடிய பொது நம்ம காதில் கிடைத்த செய்தி , கொஞ்சம் புதுசாய் நிறைய கேள்விகளையும் தோற்றுவித்து வந்து விழுந்தது.

புதிதாக கோடம்பாக்கத்தில் காதலில் சுற்றும் ஜோடியாக கிசுகிசுக்கப்படுகின்றவர்கள் அதர்வாவும் ப்ரியா ஆனந்தும் தான். இதன் காரணமாக , இவர்களது காதல் தெரிந்தவர் தான் சம்பத்.
எனவே காதலை கண்டு பிடித்ததால், வேலையும் பறி போய் விட்டது.
இது ப்ரியா ஆனந்தின் வேலையாகவும் இருக்கலாம் என்று மனேஜரின் தரப்பில் கூறப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும், இது கொஞ்ச ஓவர் தான் என்று திரையுல புள்ளிகள் எரிச்சலை வார்த்தையாய் கக்கி வருகிறார்கள்.
2,022 Views
இளையராஜாவின் இளைய மகன் யுவன் மதம் மாறியது சினிமா உலகில் பல எதிர்வலைகளையும் , அதிகமான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி இன்னும் பேச்சு ஓயாமல் இருக்கும் நிலையில், அடுத்து இப்போது இன்னுமொரு திரையுலக பிரபல குடும்பமே மதம் மாறிய செய்தி அம்பலத்துக்கு வந்துள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பே சிம்பு உட்பட டி.ஆரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே கிறிஸ்தவ மதத்துக்கு மாறி இருந்தும், விடயம் வெளியில் தெரியாமல் ரொம்ப கப்சிப்பாக பேணப்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற சிம்புவின் தங்கை இலக்கியாவின் திருமண நிகழ்வினால் மத மாற்ற சம்பவம் வெளிக்கிளம்பியுள்ளது.

இந்த மத மாற்ற முடிவை எடுத்தவர் டி.ஆரின் மனைவி உஷா!
ஆரம்பத்தில் பிள்ளைகள் மூவருக்கும் உடன்பாடில்லா விட்டாலும் அன்னையின் வேண்டுகோளுக்கு தலை வணங்கியவர்களாக கிறிஸ்தவ மதத்தை தழுவி இருக்கிறார்கள் மொத்தக் குடும்பமும்.
அப்போது தன் மத மாற்றம் தொடர்பில் நெருக்கமான வட்டாரத்திடம் தன மனக் குமுறலை வெளிப்படுத்தி ஆதங்கப்பட்ட சிம்பு, இப்போது சந்தோசமாக காணப்படுகிறார் என்பது புதுச் செய்தி.
காரணம், நயனோடான காதல் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியுள்ள நிலையில், நயன்தாராவும் பிறப்பில் கிறிஸ்தவராகவும் டயானா குரியன் எனும் இயற்பெயருக்கும் சொந்தமானவராகவும் இருக்கிறார்.

இப்பொழுது உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும். சிம்பு எதற்க்காக சந்தோசத்தில் திளைத்திருக்கிறார் என்பது!
-இனி எந்த பிரச்சினையும் சிம்பு நயன் வாழ்க்கையில் வராமல் இருந்தால் சரி-
34,228 Views
எத்தனையோ பிரபலமான அழகான நடிகர்களோடு ஜோடி சேர்ந்திருந்தாலும் , உலக நாயகன் கமலோடு மட்டும் இணைந்து நடிக்க மாட்டேனென்று அந்தக் காலம் தொட்டு இன்று வரை பிடிவாதமாய் மறுத்து வந்தவர் இன்றும் இளமை மாறா அழகோடு வலம் வரும் நடிகை நதியா.

இந்த நிலையில், இதுவரை டூயட் பாடாத இவர்கள் இருவரும் த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தப்படத்தின் மலையாள தயாரிப்பில் மோகன்லால் ஜோடியாக மீனா நடித்திருந்தார். அதன் தெலுங்குப் பதிப்பிலும் மீனாதான் நடிக்கிறார். ஹீரோவாக வெங்கடேஷ் நடிக்க ஸ்ரீப்ப்ரியா படத்தினை இயக்குகிறார்.
விஷயம் இவ்வாறு இருக்கும் நிலையில், இதுவரை இணையாமல் இரு துருவங்களாக இருந்த கமலையும் நதியாவையும் இணைத்து இந்த த்ரிஷ்யத்தின் தமிழ் தயாரிப்பில் நடிக்க வைக்கலாம் என ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

இருவரிடமும் பேச்சு வார்த்தை நடை பெற்று வருகின்ற நிலையில், உலக நாயகன் சம்மதித்தாலும் , நதியா சம்மதித்து இணைந்து நடிக்க ஒத்துக் கொள்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம். ஜோடி இணைந்தால் இரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்
7,208 Views
வீரம் வெற்றிக்குப் பிறகு அஜித்தின் அடுத்த படம் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார், இது பழைய செய்தி.
படத்தின் பெயர் இன்னும் வைக்கப்படவில்லை. அல்லது வைக்கப்பட்டும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இதன் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்குகிறது.

தற்போது சிம்புவை வைத்து குறுகியகால தயாரிப்பாக ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் கவுதம் மேனன் அதை முடித்து விட்டு அஜீத் படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார்.

இந்தப் படத்தில் அஜீத்துடன், சிம்புவும் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. தலயின் தீவிர ரசிகரான சிம்புவை அஜீத்துக்கும் ரொம்பவும் பிடிக்கும்.

சமீபத்தில்கூட தி.மு.கவில் டி.ராஜேந்தர் சேர்ந்த செய்தி கேள்விப்பட்டு சிம்புவுடன் பேசிய அஜீத். உங்க படத்துக்கு பொலிட்டிக்கல் பிரஷர் எதுவும் வராம கவனமா பார்த்துக்குங்கன்னு அறிவுரை வழங்கினாராம்.

இப்போது ஆரம்பத்தில் ஆர்யா, வீரத்தில் விதார்த்துக்கு வாய்ப்பு கொடுத்ததைப்போல அடுத்த படத்தில் சிம்புவுக்கு கொடுக்கப் போகிறார்.

அவருக்கும் படத்தில் ஒரு முக்கியமான, அழுத்தமான பாத்திரத்தை உருவாக்குமாறு கவுதம் மேனனுக்கு உத்தரவிட்டிருக்கிறார். சிம்புவின் நண்பரான கவுதம் மேனனும் இன்னும் ஒரு மடங்கு உற்சாகத்தோடு களத்தில் இறங்கிவிட்டார்
6,278 Views
விஜய் அஜித் மோதிக்கொள்கிறார்களோ இல்லை, இவர்களது ரசிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்காக மோதிக்கொள்வது வழமையே.
போதாக்குறைக்கு சிம்புவும் இன்னும் சில நண்டு சுண்டுகளும் சின்ன, லிட்டில் ஸ்டார்களாக அடிக்கடி கிளம்பிக்கொள்வார்கள்.

இந்த தள்ளுமுள்ளு காரணமாகத்தான், ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக முன்னணியில் இருக்கும் அஜீத்,விஜய் ரசிகர்களுக்கிடையே அடிக்கடி மோதலும் வெடித்துக்கொண்டிருக்கிறது.

அதனால், விஜய் படம் சம்பந்தப்பட்ட விழாக்களில், அவரது அபிமானிகள் அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்வது போன்று, அஜீத் வட்டாரத்திலும் அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். ஆனால் ரஜினி ரசிகர்களோ, எங்கள் தலைவர் ஒருவரே சூப்பர் ஸ்டார் என்று அவர்கள் ஒரு பக்கம் கொடிபிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தை தயாரிப்பவர்கள் 'செளத் சூப்பர் ஸ்டார்' என்று சூர்யாவுக்கு பட்டம் சூட்டியிருக்கிறார்களாம். இதனால் ஏற்கெனவே தள்ளுமுள்ளுவில் இருக்கும் அத்தனை பேரும் இதென்ன புது கலாட்டாவாக இருக்கு என்று அஞ்சானை ஆத்திரத்தோடு பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள்.

இதற்கிடையே, சின்ன வயதில் நடித்தபோது லிட்டில் சூப்பர் ஸ்டார். பின்னர் இளைஞனானபோது யங் சூப்பர் ஸ்டார் என்று தனக்குததானே பட்டம் சூட்டிக்கொண்டு வரும் சிம்பு, அப்படின்னா நான் என்ன ஸ்டாரு என்று கேட்டுக்கெண்டு நிற்கிறாராம்.

ஆக, கோடம்பாக்கத்தில் சூப்பர் ஸ்டார் இன்னும் நடித்துக்கொண்டிருக்கையிலேயே சூப்பர் ஸ்டார் பட்டத்தை முன்வைத்து ஒரு களோபரமே நடந்து கொண்டிருக்கிறது
6,055 Views
தனுஷ், தற்போது வேலையில்லா பட்டதாரி, அனேகன், ஆகிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் தனுஷிற்கு ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படத்தில் அமலா பாலும், அனேகன் படத்தில் அமிராவும் நடிக்கின்றனர். இவ்விரு படங்களுக்குப் பிறகு தனுஷின் அடுத்தப் படத்தினை வெற்றி மாறன் இயக்குகிறார்.

Cloud Nine மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக அலியா பட் நடிக்கவிருக்கிறார். கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அனேகன்’ படத்திலேயே தனுஷுக்கு ஜோடியாக அலியா பட் நடிக்கவேண்டியது. ஆனால் அந்த நேரத்தில் கால்ஷீட் பிரச்சனையால் அந்த வாய்ப்பு கைநழுவிப்போனது.

இந்தியில் கரண் ஜோஹர் இயக்கத்தில் 2012-ல் வெளிவந்து ஹிட்டான ‘ஸ்டூடன்ட் ஆஃப் த இயர்’ பாலிவுட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் அலியா பட். தன் முதல் படத்திலேயே அழகினாலும் கவர்ச்சியாலும் பாலிவுட் ரசிகர்களை மெய் மறக்கச் செய்தவர், தற்போது தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்திலும் குடியிருக்க வருகிறார்.
6,024 Views
[1]      «      1748   |   1749   |   1750      »      [1751]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top