எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் , ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் பங்கேற்கக் கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
அத்துடன் இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் N. சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்றும் இவருக்கு பதிலாக முன்னாள் இந்திய அணித் தலைவர் சுனில் கவாஸ்கரை இடைக்கால தலைவராக நியமிக்கலாம் என்றும் நீதிபதிகள் தங்களின் பரிந்துரைகளைத் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை விசாரணைகளுக்கு வழிவிட தான் பதவி விலகத் தயார் என்று ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டதாக இந்திய கிரிக்கெட் சபை நீதிமன்றுக்கு அறிவித்திருந்தது.
இப்போது பரிந்துரைகளை வழங்கியுள்ள நீதிபதிகள், நாளை அதிகாரபூர்வ உத்தரவைப் பிரப்பிக்கவுள்ளனர்.
ஊழல் விசாரணைகளை செல்வதற்காகவே இந்தப் பரிந்துரைகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வெளியுட்டுள்ளார்கள்.
இந்த குற்றச்சாட்டுக்களில் இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் N. சீனிவாசன், அவரது மருமகனும் சென்னை அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான குருநாத் மெய்யப்பன், சென்னை மற்றும் இந்திய அணிகளின் தலைவரான மகேந்திரசிங் தோனி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ரா இன்னும் பலரின் பெயர்கள் அடிபடுகின்றமை முக்கியமானது.

இன்றைய பரிந்துரைகளும் நாளைய தீர்ப்பும் இவர்களில் எல்லோருக்கும் அல்லது பெரும்பாலோனோருக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.