ஜெயம்ரவியின் அப்பாடக்கர், விமலின் மாப்ள சிங்கம் ஆகிய படங்களில் படு பிசியாக இருந்தவர், திடீரென படப்பிடிப்பில் இருந்து காணாமல் போய் விட்டார் என்று ஒரு தகவல் கசிந்தது.
அஞ்சலிப் பாப்பாவுக்கு என்னாச்சு என்று விசாரித்த நேரம், அம்மணிக்கு ஒரு பாப்பா இருப்பதாகவும், அதனால்தான் அடிக்கடி அந்தக் குழந்தையை பார்ப்பதற்காக இவர் மாயமாகி விடுவதாகவும் சொல்லப்பட்டது.
சீ.சீ ...சீ ! அப்படியெல்லாம் இருக்காது என்று, அஞ்சலியை அழைத்து விசாரித்தோம். அப்போதுதான் உண்மை வந்தது.
''என்னங்க இது? என்னோட சொந்தக்காரர் பொண்ணுகூட நின்னு போட்டோ எடுத்தது கூட ஒரு தப்பா? உடனே அது என்னோட பொண்ணுன்னு சொல்லிட்டாங்க. எப்பிடி இப்பிடியெல்லாம் கதை கட்ட முடியுது? ஆனாலும், நான் ரொம்ப தைரியமான பொண்ணு, எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை. இதுதான் உண்மை. உங்களுக்கு வெளிப்படையாக சொல்லிருக்கேன்...'' என்று கொஞ்சம் கோபமாகவே முடித்தார் அஞ்சலி.
அப்போ... இப்பிடியெல்லாம் கதை கட்டுறவங்க யாரு? தேடத்தான் வேணும்பா...
-கோடம்பாக்கக் குருவி-