அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சோக்கார் சானேவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டு நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டி ஒன்றின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 3 பேர் கொல்லப்பட்டதுடன், 260 பேர் காயமடைந்தனர்.
இதனை அடுத்து சோக்கார் சானேவ் தமது 19வது வயதில் கைது செய்யபட்டிருந்தார்.
இரண்டு வருடங்களின் பின்னர் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவரை இந்தியானாவில் உள்ள டெரே ஹோடே சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த தண்டனைக்கு எதிராக முறையீடு செய்யப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தமது சகோதரருடன் இணைந்தே இந்த குற்றச் செயலில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்து.
குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற மறுதினம் அவர் கைது செய்யப்பம் போது, அவரின் சகோதரர் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.