கோலிவுட் இயக்குனர்களை மட்டுமின்றி கோலிவுட்டின் பிரபல நடிகர்களையும் தற்போது பேய் பிடித்து ஆட்டி வருகிறது. டார்லிங், காஞ்சனா 2, அரண்மனை, போன்ற படங்களின் வெற்றியை பார்த்த கோலிவுட்டின் முன்னணி நாயகர்களும் தற்போது பேய்ப்பட கதைகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. சூர்யா நடித்து வரும் 29ஆம் தேதி வெளிவரவுள்ள 'மாஸ்' திரைப்படமும் பேய்ப்படமே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இதுவரை ரொமாண்டிக் மற்றும் நகைச்சுவை படங்களில் நடித்து வந்த ஆர்யாவும் பேய்ப்படத்தில் களமிறங்க உள்ளாராம். ஆர்யாவின் சகோதர் சத்யா நடிப்பில் வெளியான 'அமரகாவியம்' படத்தை இயக்கிய ஜீவாசங்கர் சொன்ன பேய்க்கதை ஒன்று ஆர்யாவை மிகவும் கவர்ந்துவிட, அந்த படத்தில் பேயாக நடிக்க முடிவு செய்துள்ளாராம். இதுவரை பெண் பேய்கள் மட்டுமே ஆட்டிப்படைத்து வந்த கோலிவுட் திரையுலகில் இனிமேல் ஆண் பேய்களின் ஆதிக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா, அருள்நிதியை அடுத்து ஆர்யாவும் ஆண்பேயாக நடிக்கவுள்ளார்.
இந்த படம் தவிர ஆர்யா தற்போது 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, யட்சன், இஞ்சி இடுப்பழகி ஆகிய தமிழ் படங்களிலும், சைஸ் ஜீரோ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகின்றார். அதுமட்டுமின்றி ரோமியோ ஜூலியட், இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். ஆர்யாவின் யட்சன் மிக விரைவில் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-கோடம்பாக்கக் குருவி-