நயன்தாரா நடித்து வரும் த்ரில் பேய்ப்படமான 'மாயா' விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஹீரோ ஆரி நடித்துள்ள கேரக்டர் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஆரி இந்த படத்தில் பத்திரிகை ஒன்றில் பணிபுரியும் ஓவியராக நடித்துள்ளாராம். உண்மையில் ஓவியம் வரைவது என்றால் என்ன என்றே தெரியாத அளவுக்கு ஜீரோவாக இருந்த தனக்கு இந்த கேரக்டரை கையாள்வதில் ஆரம்பத்தில் சிரம்மம் ஏற்பட்டதாக கூறிய ஆரி, க்ளோப் அப் ஷாட் எடுக்கும்போதெல்லாம் இயக்குனர் டூப் வைத்து எடுத்ததாக கூறினார். ஆனால் டூப்பை விரும்பாத ஆரி, படத்தின் கலை இயக்குனர் ராமலிங்கம் அவர்களிடம் தினமும் ஓவியம் வரைய பயிற்சி எடுத்ததாகவும், சில நாட்களில் ஓவியம் வரைவதன் அடிப்படையை தெரிந்து கொண்டதால், அதன் பின்னர் குளோப் அப் ஷாட்களிலும் டூப் இல்லாமல் நடித்ததாகவும் கூறினார்.
பொதுவாக பேய்ப்படத்தில் நம்ப முடியாத திகில் காட்சிகள்தான் இடம்பெற்றிருக்கும் என்றும் ஆனால் இந்த படத்தின் காட்சிகள் ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும் என்று கூறிய ஆரி, இந்த படத்தில் எந்த அளவுக்கு திகில் இருக்கின்றதோ அதே அளவுக்கு காமெடியும் இருக்கும் என்றார்.
நயன்தாரா, ஆரி, கருணாஸ், மற்றும் பல நடித்துள்ள இந்த படத்தை அஷ்வின் சரவணன் இயக்கி வருகிறார்.
-கோடம்பாக்கக் குருவி-