சத்தமின்றி உதவி செய்யும் தளபதி.......???
அமைதியான முறையில், யாருக்கும் தெரியாமல் பல உதவிகள் செய்து வருபவர் இளையதளபதி விஜய் என்று அவ்வப்போது வரும் செய்திகள் சொல்கின்றன. அப்படியிருந்தும் எப்படியோ அவர் செய்யும் உதவிகளில் சில வெளியே கசிந்து விடுகின்றவாம். இந்த உதவிகள் பெரும்பாலும் கல்வி கற்கும் மாணவர்கள் முதல் மருத்துவ செலவு செய்ய முடியாத நோயாளிகள் வரைக்கும் நேரடி பண உதவியாகவே செய்திருக்கிறாராம் இளையதளபதி விஜய்.
இப்படி வெளியே தெரியாமல்..? உதவிகள் பலவற்றை சாதாரண ஏழை மக்களுக்கு செய்து வருகின்ற நடிகர் விஜய், தற்போது தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கும்கூட நிதியுதவி செய்திருக்கிறாராம். ஏனெனில், இயக்குனர் சங்கத்தினர் ஒன்றிணைந்து சென்னை வளசரவாக்கத்தில் புதிய திரையரங்கம் ஒன்று அமைப்பதற்கு உதவியாகவே 15 லட்சம் ரூபாவினை வழங்கி நிதியுதவி செய்திருப்பதாக கோடம்பாக்க செய்திகள் சொல்கின்றன.
இயக்குனர் சங்கத்தின் இந்த முயற்சிக்கான தனது பங்களிப்பாக, இயக்குனர் சங்கத்தலைவர் விக்ரமன் அவர்களிடம் இளையதளபதி விஜய் இந்த பணத்தை நேரடியாகக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சங்க உறுப்பினராக இல்லாமல், நடிகராக மட்டுமே உள்ள இளையதளபதி இந்த நிதியுதவியை வழங்கியிருப்பது பெருமையடைய வைப்பதாக இந்தக் கட்டடத்தை அமைக்கும் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனராம், அத்துடன், இயக்குனர் விஜய் உள்பட இன்னும் பலரும் இந்த கட்டிடத்திற்காக நிதியளித்து வருவதாக செய்திகள் வெளியாகின்றன.
இந்தநிலையில், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் கட்டப்படும் இந்த திரையரங்கக் கட்டடத்திற்கு, மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாம். இவ்வாறு அமைக்கப்படும் திரையரங்கத்தில், வளர்ந்துவரும் உதவி இயக்குனர்கள் தமது துறையில் முன்னேற பயன்படும் வகையில் உலக தரமான திரைப்படங்களை வார இறுதி நாட்களில் திரையிடவும் தமிநாடு இயக்குனர் சங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
*S. G. R