சுமார் 15,800 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களுடன் தோழனாக வாழ்ந்து வரும் உயிரினம் நாய்.
துருக்கியில் உள்ள Pinarbasi என்ற பாறையில் கண்டெடுக்கப்பட்ட இந்த நாயின் எச்சங்கள் சுமார் 15,800 ஆண்டுகள் பழமையானவை என கூறப்படுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் ஐரோப்பா முழுவதும் கண்டெடுக்கப்பட்ட 216 பண்டைய எச்சங்களை ஆய்வு செய்தனர்.
துருக்கியில் கண்டெடுக்கப்பட்ட நாய், மனிதர்களுக்கு இணையாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்த நாய்களுக்கு மீன் உணவாக வழங்கப்பட்டதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த பண்டைய நாய்கள் இன்றைய நவீன ஆர்க்டிக் நாய் இனங்களை விட, ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாய் இனங்களுடன் அதிக மரபணு ஒற்றுமையைக் கொண்டுள்ளன.
இவை வேட்டையாடுவதில் மனிதர்களுக்கு உதவியாகவும், ஆபத்து காலங்களில் எச்சரிக்கை செய்யும் கருவியாகவும் செயல்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.