31,551 Views
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட தொடர் தீவிரவாத தாக்குதலில் 150 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் புகழ்பெற்ற 'பெட்டகிளன் ' அரங்கில் இடம்பெற்ற நிகழ்சியொன்றில் 118 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன்போது பலர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்ததுடன் , தற்கொலைக் குண்டுத்தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.

'பெட்டகிளன்' அரங்கில் நுழைந்த தீவிரவாதிகள் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மூலம் சரமாரியாக சுட்டுள்ளதுடன், குண்டுகளையும் வீசித் தாக்குதல் நட த்தியுள்ளனர்.
குறித்த திரையரங்கில் இருந்த 4 தீவிரவாதிகளில் மூன்று பேர் அவர்களது தற்கொலை அங்கியையும் வெடிக்கச் செய்துள்ளனர். பணயக்கைதிகளை மீட்கும் பொருட்டு பொலிஸார் உள்ளே நுழைந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சுற்றிவளைப்பின் போது 4 பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு 5 மைல் தொலைவில் அமைந்துள்ள 'Stade de France' விளையாட்டு அரங்கத்தின் வெளியே இரண்டு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. 
இவ்விளையாட்டரங்கில் ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்துள்ளது.

பிரான்ஸ் பொலிஸார் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க சந்தேக நபரொருவரை கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில் பிரான்சில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிரான்ஸ் தனது எல்லைகள் அனைத்தையும் மூடியுள்ளதுடன் 1,500 மேலதிக துருப்பினர் தலைநகருக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் 6 ஒன்றிணைக்கப்பட்ட தாக்குதல்களை பாரிஸ் நகரில் நடத்தியுள்ளனர்.
இதேபோல் கம்போடிய உணவகமொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஏ.கே.47 தாங்கிய தீவிரவாதியொருவர் நட த்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் தொடர்ந்தும் வெளியாகிய வண்ணமுள்ளன.
இதேவேளை மேற்படி தாக்குதல்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உட்பட பல உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.