தண்ணீரால் இரும்பை வெட்ட முடியுமா என்றால் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், ‘Water jet cutting’ எனப்படும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அதிக அழுத்தத்துடன் அதிவேகமாக செலுத்தப்படும் நீரைப் பயன்படுத்தி இரும்பு உள்ளிட்ட கடினமான உலோகங்களையும் துல்லியமாக வெட்ட முடியும்.
இந்த முறையில் மிக அதிக அழுத்தத்தில் நீர், சிறிய முனை வழியாக வேகமாக வெளியேற்றப்படுகிறது. கடினமான உலோகங்களை வெட்டும்போது நீருடன் நுண்ணிய மணல் துகள்களும் சேர்க்கப்படுவதால் வெட்டும் திறன் அதிகரிக்கிறது. மேலும், இந்த முறையில் அதிக வெப்பம் உருவாகாததால் உலோகத்தின் தன்மையிலும் பாதிப்பு குறைவாக இருக்கும்.
தொழிற்சாலைகளில் வாகனங்கள், விமானப் பாகங்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் தயாரிப்பில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சாதாரண குழாய் நீரால் இதைச் செய்ய முடியாது. இதற்கென பிரத்தியேக இயந்திரமும் அதிக அழுத்தமும் தேவைப்படுகிறது.