7,402 Views
எம்பிலிபிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பொலிஸாருடனான மோதலின் போது மாடியிலிருந்து கீழே விழுந்த இளைஞன் ஒருவன் உயிரிழந்தார்.
இச்சம்பவம் நாடு முழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த து.
பொலிஸார் மதுபான போத்தல்களைக் கேட்டதாகவும் , அதன் பின்னர் ஏற்பட்டதாக கூறப்படும் மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியை நேற்று இடம்பெற்றுள்ளது.
29 வயதான சுமித் பிரசன்னகே என்ற குறித்த இளைஞனின் உடல் , அதிரடிப் படை பாதுகாப்புடன் , அடக்கம் செய்யப்பட்டது.
ஆயிரக் கணக்கான மக்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
எம்பிலிபிட்டிய மயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட துடன் , இதன்போது பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞன் மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இளைஞனின் மரணம் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.