கற்றது தமிழ் எனும் படம் மூலம் தன் பயணத்தை ஆரம்பித்து, மாறுபட்ட கதைகளும் வெல்லும் என்பதை தங்கமீன்கள் மூலம் நிரூபணம் செய்தவர் இயக்குனர் ராம். தங்கமீன்கள் அள்ளிக் கொண்ட விருதுகளும் பெற்றுக் கொண்ட பாராட்டுக்களும் எண்ணிலடங்காதவை.
இப்பொழுது தரமணி எனும் படத்தை எடுத்து வருகிறார். படம் முடிவுறும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், தனது அடுத்த படத்தை ஆரம்பித்துள்ளார். ஹீரோவாக நடிக்க மம்முட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹீரோயின்கள் யாரென்று கேட்டால் அசந்து அதிர்ந்து போவீர்கள். காரணம், மம்முட்டி கொஞ்சம் முதிர்நிலை ஹீரோ. அதாவது சீனியர் ஹீரோ எனலாம். இவ்வாறு ஒரு ஹீரோவுக்கு நாயகிகளாக நடிக்க இப்போதுள்ள நடிகைகள் யாரும் விரும்ப மாட்டார்கள். இதுதான் வழமை.
ஆனாலும், ஒருவர் என்பதையும் கடந்து இருவர் இப்படத்தில் மம்முட்டி ஜோடியாக நடிக்க இசைந்துள்ளனர். ஆண்ட்ரியா மற்றும் அஞ்சலி ஆகிய இளம் பறவைகளே இப்படத்தின் மூலமாக ஒன்றாய் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ஆஹா, என பலரும் வியக்க, நாம இது நடக்கப்படாதே என்ற கோணத்தில் ஆராய்ந்தோம். அப்போதுதான் விஷயம் வெளியே கசிந்தது. அதாவது, அஞ்சலியின் குருநாதர் தான் ராம் (கற்றது தமிழ்). ஆண்ட்ரியாவுக்கும் தரமணி எனும் படம் மூலம் மாறுபட்ட பாத்திரத்தை வெளிப்படுத்த வாய்ப்பளித்தவர் இவர் என்பதால் தான், இருவரும் தமது நன்றிக்கடனை இப்படத்தின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். எது எப்பிடியோ? மம்முட்டிக்கு மச்சம்தான்!!
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-