4,419 Views
பம்பலபிட்டிய - பீட்டர் கல்லூரியில் பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பம்பலபிட்டிய - பீட்டர் கல்லூரியில் பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பீட்டர் கல்லூரியின் களஞ்சிய அறையொன்றிலிருந்து அங்கு பணியாற்றும் பெண் சிற்றூழியர் ஒருவரின் சடலம் அண்மையில் மீட்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாடசாலையின் காவலாளியும் , அப்பெண்ணை சந்திக்க வந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் அப்பெண்ணை சந்திக்கவந்த நபர் அவருடன் கள்ளத் தொடர்பை பேணி வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணின் அழைப்புக்கமையவே அந்நபர் சம்பவதினத்தன்று அங்கு வந்துள்ளதாகவும் , இதன்போது இடம்பெற்ற வாய்த்தர்கத்தின் போது அப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது